states

img

மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை முடக்கம்!

மணிப்பூர் மாநிலத்தில் ஒரு சில இடங்களில் வன்முறை நீடிப்பதால், மே 26-ஆம் தேதி வரை இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் ‘மெய்டெய்’ (Meitei) என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கும், குக்கி என்ற பழங்குடி மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர், 30,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். இந்த நிலையில், மாநிலத்தில் ஒரு சில இடங்களில் வன்முறை நீடிப்பதால், மே 26-ஆம் தேதி வரை இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருள், உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தற்போது இணைய சேவைகள் முடக்கத்தால் வங்கி மற்றும் ஏ.டி.எம் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.