states

‘கடவுளையே’ கைது செய்த மோடி!

இம்பால், ஆக.3- மணிப்பூரில் தனது மனைவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ வை கடவுள்தான் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்.. இல்லாவிட்டால் அவருக்கு நேர்ந்த கொடுமைகளும், உண்மைகளும் வெளியே தெரியாமலேயே போயிருக்கும் என்று பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவரான- முன்னாள் ராணுவ வீரர் உருக்க மாக கூறியுள்ளார். மணிப்பூா் மாநிலத்தில், கடந்த மே 4 அன்று  பழங்குடி பெண்கள் இருவரை, ஆயிரக்க ணக்கான ‘மெய்டெய்’ இளைஞர்கள், பாலி யல் சீண்டல்களை நிகழ்த்தியபடியே நிர்வாண மாக இழுத்துச் சென்றதுடன், அவர்களைக் கும்பல் வல்லுறவுக்கும் உள்ளாக்கிய கொடுமை நடந்தது. இந்தச் சம்பவம் மிகவும்  தாமதமாக கடந்த ஜூலை 19 அன்றுதான் வெளி யுலகிற்குத் தெரியவந்தது. சமூகவலை தளத்தில் வெளியான அந்த வீடியோவைக் கண்டு உலகமே அதிர்ந்தது. பார்க்கும் ஒவ்வொ ருவரையும் வெட்கித் தலைகுனிய வைத்தது.  இந்த வீடியோவைதான், கடவுளே வெளிக் கொண்டு வந்த வீடியோ என பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவரான முன்னாள் ராணுவ வீரர் கூறியுள்ளார்.  65 வயதாகும் இந்த முன்னாள் ராணுவ வீரர், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டிற்குப் பேட்டி  அளித்துள்ளார்.  அதில், “எனது மனைவி வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக மே 18 அன்றே  புகார் அளித்தேன். காங்போக்பி மாவட்டத்தில்  உள்ள சைகுல் காவல் நிலையத்தில் பூஜ்ஜிய  எப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், நடவடிக்கைகள் இல்லை. இந்நிலையில், உண்மை வெளியே வர, கடவுள்தான் இந்த வீடியோவை (பாலியல் வன்கொடுமை) வைரலாக்கியிருக்க வேண்டும். 

ஏனெனில், வீடியோ வெளியாகும் வரை,  காவல்துறை அல்லது அரசாங்கத்திலிருந்து யாரும் எங்களை அழைக்கவில்லை. எங்களின் புகாரின் பேரில், மிகவும் முன்னதாகவே நட வடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வீடியோவுக்கு முன், ‘என்ன நடந்தது?’ என்று நாங்கள் சொன்னபோது யாரும் எங் களை நம்பவில்லை. அதோடு மணிப்பூரில் என்ன நடக்கிறது? என்பதையும் யாரும் பெரி தாக கண்டு கொள்ளவில்லை. வீடியோ வெளி யான பிறகே இங்கு நாங்கள் படும் துன்பத்தை  மற்றவர்கள் அறிந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்ததிலிருந்து, தனது பிரிவில் உள்ள அதிகாரிகளிடமிருந்தும் முன் னாள் ராணுவ வீரர்கள் சங்கத்திலிருந்தும் தனக்கு நிறைய அழைப்புகள் வந்தன. இந்த  சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. இதிலி ருந்து எங்களால் மீண்டு வர முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். தனது 18 வயதில் அசாம் படைப்பிரிவில் சிப்பாயாக பணிக்கு சேர்ந்த இவர், சுமார்  30 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி யவர் ஆவார்.

இந்த சமயத்தில் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் பல்வேறு முக்கிய ராணுவ நடவடிக்கையில் செயல் பட்டார். ஜம்மு - காஷ்மீரில் ஆபரேஷன் ரக்சாக் எனும் பயங்கரவாத எதிர்ப்பு நடவ டிக்கை, அசாம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் முழு வதும் ஆபரேஷன் ரினோ ராணுவ நட வடிக்கை, இலங்கை உள்நாட்டு போர் உள்  ளிட்டவற்றில் பங்கெடுத்துள்ளார். இவர் சைன்ய சேவா பதக்கம், ஒப் விஜய் பதக்கம், விதேஷ் சேவா பதக்கம் உள்பட பல்வேறு பெற்றுள்ளார். 2000-களின் பிற்பகுதியில் சுபேதாராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.  இவ்வாறு நாட்டைப் பாதுகாப்பதற்காக போராடிய அவரால், தனது மனைவிக்கான பாதுகாப்பை இந்த நாட்டிடமிருந்து பெற முடியவில்லை என்பதே சோகமான ஒன்றாகி  இருக்கிறது. அதிலிருந்தே, தனது மனை விக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்  பான வீடியோவை கடவுள்தான் வெளிச்சத் திற்குக் கொண்டு வந்திருப்பதாக கூறியி ருக்கிறார். ஆனால், இதில் துயரமான விசித்திரம் என்னவென்றால், சுபேதார் குறிப்பிடும் அந்த கடவுள், அதாவது வீடியோவை வெளியிட்ட நபர், அவரது மொபைல் போனுடன் மோடி அரசால் கைது செய்யப்பட்டு விட்டார் என்பது தான்.