states

img

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பிரேன் சிங்!

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது ராஜினாமா கடித்தத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் இன்று வழங்கினார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மெய்தேய் சமூகத்திற்கும், குக்கி பழங்குடியினருக்கும் இடையே வன்முறையை நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசும், அம்மாநில பாஜக அரசும் வன்முறையை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.
மேலும், வன்முறையை தூண்டும் வகையில் பிரேன் சிங் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், பிரேன் சிங்கிற்கு எதிராக அம்மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆளும் பாஜகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்களும் இதற்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. 
இந்த நிலையில், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது ராஜினாமா கடித்தத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் இன்று வழங்கினார்.