states

எரிக்கப்பட்ட - சூறையாடப்பட்ட சொத்துக்கள், அபகரித்தோர் விவரத்தை தாக்கல் செய்க! மணிப்பூர் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி, டிச. 9 - மணிப்பூர் இனக்கலவரத்தின் போது முழுமையாக மற்றும் பகுதியாக எரிக்கப்பட்ட சொத்துக்கள், கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் அத்துமீறி அபகரிக்கப்பட்ட கட்டடங் கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங் களை வழங்குமாறு மணிப்பூர் அரசுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பைரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு, தனது வாக்குவங்கி அரசியலுக்காக மெய்டெய் பிரிவு மக்களை பழங்குடி களாக அறிவிப்பதாக வாக்குறுதி அளித்தது, அங்கு ஏற்கெனவே இருக்கும் குக்கி பழங்குடி பிரிவின ரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி யது. பாஜக அரசின் அறிவிப்பு, மலை வளத்தை சூறையாடும் சூழ்ச்சி கொண்டது என்று குக்கி பழங்குடி கள் போராட்டத்தில் இறங்கினர். போட்டியாக மெய்டெய் பிரிவினரை பாஜக தூண்டிவிட்டது. 

இதில், கடந்த ஆண்டு 2023 மே  மாதம் முதல் தற்போது வரை இரு தரப்பிலும் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கான வீடுகள், வாகனங்கள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்பட்டதுடன், தீயிட்டும் எரிக்கப்பட்டன. சொத்துக் கள் ஆக்கிரமிப்பும் நடந்துள்ளது. இப் போது வரை மணிப்பூர் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது.

மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார்  அமர்வு முன்பு திங்களன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, மாநி லத்தில் மறுவாழ்வைக் கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா மிட்டல் குழுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் விபா மகிஜா ஆஜ ரானார். அவர், நீதிபதி கீதா மிட்டல் கமிட்டி கடந்த ஆண்டு முதல் மேற்கொண்ட பல்வேறு பணிகள் குறித்து 34 அறிக்கைகளை தயாரிக்கப் பட்டு உள்ளதாக தெரிவித்தார். பணி களின் முன்னேற்றம் மற்றும் குழு வினால் கையாளப்பட்ட முக்கிய மனிதாபிமான நடவடிக்கைகளையும் சமர்ப்பித்தார். மேலும், மாநிலத்தில் தொடரும் வன்முறை மற்றும் தடை யுத்தரவுகள் தங்களின் மீட்புப் பணி களைப் பாதிக்கின்றன என்று எடுத்துக் காட்டினார்.

\முன்னதாக, மணிப்பூர் பழங்குடி யினர் மன்றமும் தாக்கல் செய்திருந்த மனுவில், 2023 மே 3 அன்று வன் முறை துவங்கியதில் இருந்து மணிப் பூரில் இருந்து உள்நாட்டில் இடம் பெயர்ந்த சுமார் 18000 பேர் மற்ற மாநி லங்களில் வசிப்பதாகக் கூறினர். சொத்துக்கள் சூறையாடப்பட்டி ருப்பதாகவும், ஆக்கிரமிக்கப்பட்டி ருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, மணிப்பூர் மாநில பாஜக அரசு சார்பில் ஆஜ ரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தற்போதைய சூழ லில், மாநில அரசின் முதல் முன்னு ரிமை வன்முறையைக் கட்டுப்படுத்து வதாகவும், பின்னர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டெ டுப்பதாகவும் மட்டுமே உள்ளது என்று பதிலளித்தார்.

இவை அனைத்தையும் கேட்டுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, எரிக்கப்பட்ட, சூறையாடப்பட்ட மற்றும் அத்துமீறி நுழைந்த கட்டடங் கள் மற்றும் அத்துமீறுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரங்களை மூடி முத்திரையிடப் பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யு மாறு மணிப்பூர் அரசுக்கு உத்தர விட்டது.

மேலும், இந்த வழக்கு 2025 ஜனவரி 20-க்குப் பிறகு விசாரிக்கப்படும் என்று அறிவித்தது.