states

பைரேன் சிங் போட்ட ராஜினாமா நாடகம்!

இம்பால், ஜூன் 30 - மணிப்பூர் மாநிலம் இனக்கல வரத்தால் பற்றியெரியும் நிலையில்,  முதல்வர் பைரேன் சிங், பாஜக-வினரை வைத்து போட்ட ராஜினாமா நாடகம் மணிப்பூர் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அவர்களை அவமானப்படுத்துவ தாகவும் அமைந்துள்ளது. மணிப்பூர் இனக்கலவரத்திற்கு பொறுப்பேற்று, பைரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய  முடிவெடுத்து விட்டார் என்று தகவல்கள் வெளியான நிலையில், பாஜக தொண்டர்கள், கடிதத்தைப் பறித்துக் கிழித்துப் போட்டுவிட்ட தால், ராஜினாமா செய்ய முடியாமல் போய்விட்டது என்றும் கூறி, எந்தள விற்கு முடியுமோ, அந்த அளவிற்கு மணிப்பூர் மக்களை பைரேன் சிங் கேலிப்பொருள் ஆக்கியுள்ளார்.

2 மாதமாகியும் அணையாத வன்முறை நெருப்பு

மெய்டெய் - குக்கி சமூகத்தின ருக்கு இடையிலான இனக்கல வரத்தால், மணிப்பூர் மாநிலம் முற்றிலு மாக அமைதியை இழந்துள்ளது.  பாஜக ஆட்சி நடக்கும் மணிப்பூரில் கடந்த மே 3 அன்று  மெய்டெய் மற்றும் குக்கி பழங்குடி யினர் இடையே வன்முறை வெடித்தது. பெரும்பான்மை சமூகமாக இருக்கும் மெய்டெய் மக்களின் வாக்கு களை அறுவடை செய்யும், அரசியல் ஆதாய நோக்கத்தில், அவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து தருவதாக பாஜக அரசு உறுதியளித்தது. இதுவே மணிப்பூர் அரசியலில் வன்முறை நெருப்பைப் பற்ற வைத்தது. எரியும் இந்த நெருப்பில், ஆர்எஸ்எஸ் - பாஜக ஆதரவு மதவெறி அமைப்புக் கள் வகுப்புவாத எண்ணெய்யை ஊற்றவே, அது அணையாத நெருப்பாக மாறி கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.  இந்த வன்முறையில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படியே 131 பேர் உயிரிழந்துள்ளனர். 5,036  தீவைப்பு வழக்குகள் பதிவாகி யுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 எப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப் பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். மாநிலத்தில் சுமார் 36,000 பாது காப்புப் படை வீரர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை  (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிப்பு

வன்முறை துவங்கி 2 மாதமாகியும் பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் பற்றி ஒருவார்த்தை கூட வாயைத் திறந்து பேசவில்லை. மணிப்பூர் மாநிலத்திற்கு வந்து பார்வை யிடவும் தயாரில்லை. மணிப்பூருக்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்ப வேண்டும்; முன்ன தாக, பைரேன் சிங்கை முதல்வர் பதவியிலிருந்து நீக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று, கடந்த ஜூன் 24 அன்று அமித்ஷா தலைமையிலான கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. அதுபற்றியும் மோடி அரசு இப்போதுவரை பதிலளிக்கவில்லை.

ராஜினாமா நாடகம்

ஆனால், பாஜக தொண்டர்களை வைத்து, முதல்வர் பைரேன் சிங் ராஜி னாமா நாடகம் ஒன்றை அரங்கேற்றி யுள்ளார். முதல்வர் பைரேன் சிங், ராஜினாமா கடிதத்தை தயார் செய்து  வைத்திருக்கிறார்; அதனை ஆளுநர் உய்கே-வைச் சந்தித்து வழங்கு வார் என பாஜக-வினர் வெள்ளிக்கிழ மையன்று காலை தகவல்களை பரவ விட்டனர். பைரேன் சிங் வீட்டு முன்பும் அவர்கள் குவிந்தனர். எந்த காரணத்தை கொண்டும் பைரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என்று கோஷம் போட்டதுடன், அவரின் ராஜினாமா கடிதம் என்று, அரசாங்க முத்திரையுடனான ஒரு காகிதத்தைக் காட்டி, அந்தக் காகிதத்தையும் கிழித்தெறிந்தனர். பைரேன் சிங், ஆளுநரைச் சந்திக்க புறப்பட்ட நிலையில் அவரை தடுத்து நிறுத்தும் செயலிலும் இறங்கினர். அதாவது, முதல்வர் பைரேன் சிங் பதவி விலகுவதற்குத் தயாராகவே இருக்கிறார்; ஆனால், பாருங்கள்.. மக்கள்தான் அவரைப் பதவி விலக விடாமல் தடுக்கின்றனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நாடகத்தை அரங்கேற்றினர்.  அதற்கேற்பவே, முதல்வர் பைரேன் சிங், வேகவேகமாக ஆளுநர்  மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றா லும், அங்கு ஆளுநர் அனுசுயா உய்கே-வை சந்தித்தாலும், ராஜினாமா செய்யாமலே திரும்பி வந்து, நாடகத்தை சுபமாக முடித்துள்ளார். ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பின்னர், டுவிட்டரில் கருத்து ஒன்றைப்  பதிவிட்ட முதல்வர் பைரேன் சிங், “இது முக்கிய தருணம். மணிப்பூர்  முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்’’ என்றும் அறிவித்து வேஷத்தைக் கலைத்துள்ளார்.

மணிப்பூர் வன்முறையில் மேலும் 3 பேர் பலி

மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டம், ஹராவதேல் கிராமத்தில் வியாழனன்று அதிகாலை, ஆயுதம்  தாங்கிய வன்முறைக்குழு ஒன்று  திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்த னர். அவர்களில் 2 பேர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் வெள்ளிக் கிழமையன்று இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பகுதி, தலைநகா் இம்பாலில் இருந்து  20 கி.மீ. தொலைவில் அமைந்துள் ளது. பாதிக்கப்பட்ட பகுதியில், போலீ சார் மற்றும் கூடுதல் ராணுவத்தி னர் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டு உள்ளதாகவும், நிலைமை தொடா்ந்து கண்காணிக்கப் பட்டு வருவதாகவும் ராணுவ அதி காரிகள் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 135 பேர் கலவரத்தில் பலியாகியுள்ள நிலையில், அங்கு வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனி டையே, மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டி, சூரசந்த்பூரில் வியாழ னன்று மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.