இம்பால், ஜூலை 21 - மணிப்பூர் 2 பழங்குடிப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றதுடன், அவர்களை கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் குற்றவாளிகளில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள தாக முதல்வர் பைரேன் சிங் தெரி வித்திருந்தார். தற்போது மேலும் 2 பேர் என, இதுவரை மொத்தம் நான்கு பேர் மணிப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணை வயல்வெளியில் இழுத்துச் செல்லும் கூட்டத்தில் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நான்கே பேர் மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. எனினும், மே 4 அன்று நடந்த இந்தக் கொடூரக் குற்றம் தொடர்பாக, மே 18 அன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரே புகார் அளித்துள்ளார். அதில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது; எனினும், இந்த சம்பவத்தில் தொடர்பு டைய ஆயிரம் பேரில், இதுவரை 4 பேரை மட்டுமே பைரேன் சிங் அரசு கைது செய்திருப்பது அலட்சியத்தின் உச்சம் என்றே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.