ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை நீட்டித்து ஆளுநர் கையில் அதிகாரம்
புதுதில்லி, செப். 27 - ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் (AFSPA) கீழ், மணிப்பூர் மாநிலம் முழுவதையும் கலவரப் பகுதியாக (Disturbed Area), அம்மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மணிப்பூரில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி- பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள 19 காவல்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதி களைத் தவிர்த்து- எஞ்சிய மாநிலம் முழு வதையும் அடுத்த 6 மாதங்களுக்கு ஆயு தப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் (AFSPA) கீழ் கலவரப்பகுதியாக அறி வித்துள்ளது. இதன்படி, மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக- 19 காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதி களைத் தவிர்த்து- மாநிலம் முழுமைக்கும் ஆளுநரே இனி உத்தரவுகளைப் பிறப்பிப்பார். மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கத் துவங்கியிருப்பதை அடுத்து, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், ஆயு தப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூர் பாஜக அரசு கையில் எடுத்துள்ள தாக கூறப்படுகிறது.
‘ஆயுதங்களையோ’ அல்லது ‘ஆயு தங்களாகப் பயன்படுத்தத்தக்க பொருட் களையோ’ வைத்திருக்கும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட கூட்டத்தின் மீது உயிரைப் பறிக்கும் வகை யிலான தாக்குதலை மேற்கொள்ள ஆயு தப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் வகை செய்கிறது. ‘கூட்டம்’ மற்றும் ‘ஆயுதம்’ என் பதற்கான விளக்கம் எதுவும் அளிக்கப் படாமலேயே உயிரைப் பறிப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது, உயிரைப் பறிக்கும் வகையிலான தாக்கு தல்களை நடத்த சர்வதேச மனித உரிமை களுக்கான சட்டம் கட்டுப்பாடுகளை விதித்து ள்ளது. ஆனால், ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தின் 4(அ) பிரிவு சட்டத்தை அமலாக்கும் சூழ்நிலைகளில், உயிரைப் போக்கும் வகையில், சுடு வதற்கான அதிகாரத்தை ராணுவப் படை களுக்கும் அதற்கு துணையாக செயல்படும் மாநிலக் காவல் துறைக்கும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த ஜூலை 6 அன்று காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்ட புகைப் படம் வெளியான நிலையில், தலைநகர் இம்பாலின் சிங்ஜமேய் பகுதியில் விரைவு நடவடிக்கைப் படை (RAF) வீரர்களுக்கும் உள்ளூர் போராட்டக்காரர்களுக்கும் இடை யில் செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டது.
மோதலைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதில் போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் 45 பேர் காயமடைந்தனர். அவர் களில் பெரும்பாலும் மாணவர்கள் என்ற நிலையில், மாநிலத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன்பின்னணியி லேயே, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்ட த்தை 6 மாதங்களுக்கு நீட்டித்து, ஆளுந ருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற் காக, ஆளும் பாஜக மெய்டெய் சமூகத்தின ருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே, பற்றவைத்த பிரிவினைவாத நெருப்பு, மணிப்பூர் மாநிலத்தை மயா னக்காடாக மாற்றி இருக்கிறது. கடந்த மே 3 அன்று துவங்கி, இதுவரை நடைபெற்ற மோதல்களில் 170-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். குக்கி பழங்குடிப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டும், ஆயுதங்களால் வெட்டி வீசப்பட்டும் நரவேட்டையாடப்பட்டு வருகின்றனர். சில இடங்களில் சிறுமிகள், வயதான பெண்களும் கூட தப்பவில்லை. ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்த துடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்கள், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். மணிப்பூர் அரசு நிர்வாகம் துவங்கி, ஆளும் பாஜக-வே இரண்டு தரப்பாக மாறி நிற்கும் நிலையில், மாநிலத்தில் அமைதி யைக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ‘இந்தியா’ கூட்டணியின் தலை வர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கியபோதும், பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் செல்வதாக இல்லை. முதல்வர் பைரேன் சிங்கை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்பதாக இல்லை. இதனிடையேதான் மாணவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மீண்டும் வன்முறை, பதற்றம் ஏற்பட்டு, அதையே கார ணமாக வைத்து, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமானது, மணிப்பூர் மாநிலம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டு, அதி காரங்கள் ஆளுநரிடம் கைமாற்றப்பட்டு உள்ளது.