உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி யில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஜனவரி 22-ஆம் தேதி திறக்கப்படு கிறது. இந்நிகழ்வில் புதிதாக வடிவமைக் கப்பட்டுள்ள குழந்தை ராமரின் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட உள் ளது. “அயோத்தியில் இருந்து ராமரை மீட்டு, ராமருக்கு பிரதிஷ்டை செய்கி றோம்” என பாஜக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், “அயோத்தியில் வன் முறை நிகழ்ந்த பொழுது இருந்த பழைய ராமர் சிலை எங்கே?” என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய்சிங் கேள்வி எழுப்பி யுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறுகையில், “வன் முறை நிகழ்ந்த பொழுது இருந்த ராமர் சிலை எங்கே? அது தற்பொழுது எங்கே இருக்கிறது? ராமரை மீட்போம் என்று கூறும் பொழுது பழைய சிலை யை வைத்து ஏன் பிரதிஷ்டை மேற் கொள்ளவில்லை? புதிய சிலை எங்கி ருந்து வருகிறது? புதிய சிலைக்கு அவசி யம் என்ன?” என பல்வேறு கேள்வி எழுப்பி யுள்ளார்.