மணிப்பூர் வன்முறை, பாலியல் வல்லுறவு சம்பவங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றிய மற்றும் மாநில பாஜகவை கண்டித்து வெள்ளியன்று (ஜூலை 21) சென்னை சாஸ்திரி பவன் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக மகளிர் ஆணையம், மனித உரிமை ஆணையங்கள் விசாரணை நடத்தக் கோரியும், பாஜகவின் வெறுப்பு அரசியலை கண்டித்தும் வெள்ளியன்று ( ஜூலை 21) சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.