states

img

மகாராஷ்டிராவில் நாளை பொது விடுமுறை  

பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.  

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். லதா மங்கேஷ்கரின் உடல் இன்று மாலை 6.30 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு 2 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  

மேலும் மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மகாராஷ்டிராவில் நாளை (பிப்.7) ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்திற்கும் மகாராஷ்டிராவில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து மேற்கு வங்க அரசும் நாளை விடுமுறை அறிவித்துள்ளது.

;