புனேவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் 3 பேருக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது.
புனேவில் கடந்த பிப்.17 ஆம் தேதி டெக்கானில் உள்ள சாயத்ரி மருத்துவமனையில் ஓட்டுநர் ஒருவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவித்தனர். அதனைதொடர்ந்து பிப்.18 அன்று உள் இரத்தபோக்கு காரணமாக 70 வயதான மூதாட்டி ஒருவர் மூளைச்சாவு அடைந்துள்ளார்.
இந்த நிலையில் இவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்களின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்ட நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் புனேயில் உள்ள சாயத்ரி மருத்துவமனையில் 70 வயது பெண்ணின் கல்லீரலை, 50 வயது பெண்ணிற்கு பொருத்தி மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.
இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட 2 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் 3 பேருக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது.
இதுகுறித்து டாக்டர் பிபின் விபூதே கூறுகையில், “மூத்த குடிமக்களின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது பொதுவாக ஒரு சவாலான பணியாகும். ஏனெனில் வயதான மற்றும் உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும். 35 வயதான நபரின் கல்லீரலை, கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட 60 வயதான சாங்லியைச் சேர்ந்த ஆண் நோயாளிக்கு மாற்றப்பட்டது. மேலும் புனேவை சேர்ந்த 61 வயது பெண் ஒருவருக்கு சிறுநீரகம் மாற்றப்பட்டது” என்றும் கூறினார்.