states

img

மகாராஷ்டிராவில் டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி  

மகாராஷ்டிராவில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கரும், மரக் கட்டைகளை ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலம் சந்திராபூர் நகருக்கு அருகே மரக் கட்டைகளை ஏற்றி சென்ற லாரியும், டீசர் ஏற்றிச் சென்ற டேங்கரும் நேற்று இரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்திற்கு பிறகு தீ விபத்து ஏற்பட்டதால் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சந்திராபூரின் காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.  

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அஜய்பூரை அடைந்ததாகவும், சில மணிநேரங்களுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பலியானவர்களின் உடல்களை மீட்டு சந்திராபூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

;