மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி மக்களவைத் தொகுதி “இந்தியா” கூட்டணி வேட்பாளரான தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சியின் சுரேஷ் மத்ரேவுக்கு ஆதரவாக வசிந்த் எனுமிடத்தில் பிரம்மாண்டமான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சியினர் பங்கேற்று உரையாற்றினர்.