states

img

மகாராஷ்டிரா: லாரி மீது ஜீப் மோதிய விபத்து  

மகாராஷ்டிராவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டம் ரோகன்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியளவில்  சேகாவில் உள்ள ஒரு கோவிலுக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது புல்தானா மாவட்டம் தேவ்ல்காவ் ராஜா நகர் அருகே ஜீப் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும் 7 பேர் படுகாயமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

இதுகுறித்து தகவலறிந்து வந்த புல்தானா போலீசார் படுகாயமடைந்த 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இதையடுத்து விபத்து குறித்து புல்தானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

;