மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் பணியாற்றும் 20 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையை பொறுத்தவரை நேற்று 67,000 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 20,181 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 1,170 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,53,809ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு நேற்று மேலும் 4 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 16,388ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த தகவலை அம்மாநில உள்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.