பெங்களூரு, ஜூன் 25 - கர்நாடக சட்டப்பேரவையில், வாஸ்து சரியில்லை என்று நான்கு ஆண்டுகளாக பூட்டியே வைக்கப்பட்டிருந்த கதவை, புதிய முதல்வர் சித்தராமையா திறந்துள்ளார். “மனம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாகவே இருக்கும்; வாஸ்து என்ற பெய ரில் கதவுகளை மூடுவதெல்லாம் மூட நம்பிக்கை” என்றும் அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். கர்நாடகத்தில் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் ‘அன்ன பாக்யா’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், இந்த திட்டம் குறித்து, பெங்களூரு சட்டப்பேரவையான ‘விதான சவுதா’வில், முதல்வர் சித்தராமையா, சனிக்கிழமையன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, இந்த ஆலோசனைக் கூட்டத்திற்காக வந்த சித்தராமையா, தனது அலுவலகத்தின் தெற்குப்பகுதி கதவு மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிகாரி களிடம் விசாரித்தார். அப்போது, வாஸ்து சரியில்லை என்பதன் காரணமாக தெற்குப்புற கதவை மூடிவைத்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட முதல்வர் சித்தராமையா, அரசு அலுவலகத்திலேயே, அதுவும் சட்டப்பேரவையிலேயே இப்படியொரு மூடநம்பிக்கையா? என்று அதிர்ந்து போனார். அத்துடன், ‘மனம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்’ என்று கூறி, மூடநம்பிக்கையால் மூடப் பட்ட அந்தக் கதவை உடனடியாக திறக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மேற்கு வாசலில் இருந்து உள்ளே வந்த பணியாளர்கள் தெற்கு வாச லை திறந்தனர். தெற்கு கதவு திறக்கப் பட்டதும் சித்தராமையா அதே கதவு வழி யாக தனது அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
“ஆரோக்கியமான மனம்; தூய்மை யான உள்ளம்; மக்கள் மீது அக்கறை; நல்ல காற்று - வெளிச்சம் ஆகியவையே நல்ல வாஸ்து; மாறாக வாஸ்து என்ற பெயரில் சுவர்களை இடிப்பது, கதவுகளை ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக் கத்துக்கு மாற்றம் செய்வது உள்ளிட்டவை வாஸ்து அல்ல. அது மூடநம்பிக்கை” என அதிகாரிகளிடம் கூறினார். இந்த அறையை இதற்கு முன்பு முதல்வ ராக இருந்த மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமி, பாஜக தலை வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டவர்கள் பயன்படுத்தியுள்ளனர். எனினும், கடந்த 4 ஆண்டுகளாக வாஸ்து சரியில்லை என்று கூறி, தெற்குப்புற கதவு பூட்டப்பட்டே இருந்தது. இந்நிலையி்ல்தான், மூடப்பட்ட அந்தக் கதவைத் திறந்து, தற்போதைய முதல்வர் சித்தராமையா பயன்படுத்த தொடங்கி உள்ளார். முதல்வர் சித்தராமையாவின் இந்த நடவடிக்கை பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது. கர்நாடக முதல்வராக இருப்பவர் சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்கு சென்றால் பாதியிலேயே பதவியை இழப்பார் என்றும் ஒரு மூடநம்பிக்கை காலம்காலமாக இருந்து வந்தது. இதையும் கடந்த 2013 முதல் 2018 வரையிலான பதவிக்காலத்தில் சித்தராமையா உடைத்தெறிந்தார். பலமுறை சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குச் சென்றுவந்த சித்தராமையா, 5 ஆண்டு முழுமையாக பதவிக்காலத்தை பூர்த்தி செய்தார்.