states

ஹிஜாப் தொடர்பான வழக்கு மாணவர்களை தாக்குவது நல்ல நடவடிக்கையல்ல: நீதிபதி

பெங்களுரூ, பிப்.8- கர்நாடகா மாநிலத்தின் சில பகுதி களில் உள்ள கல்லூரிகளில் ஹிஜாப்  அணிய விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் செவ்வாயன்று விசாரித்தது.  உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் செவ்வாய்க்கிழமை காவி தாவணி அணிந்த மாணவர்களும், ஹிஜாப் அணிந்த மாணவர்களும் மோதிக் கொண்டதால் போராட்டம் வெடித்தது. மாண்டியாவில் உள்ள பிஇஎஸ் கல்லூரியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் அல்லாஹு அக்பர் என்று ஒருவர் பதிலுக்குக் கூறியுள்ளார். இதற்கிடையில், கல்லூரி நிர்வாகம் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்தது. குந்தாபுரா அரசு  கல்லூரி வளாகத்திற்குள்  ஹிஜாப் அணிந்து வந்த  மாணவர்கள் தனி வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டனர்.  இந்த நிலையில் ஹிஜாப் (முகத்தை மூடிக்கொள்வது)  தொடர்பான பிரச்சினை க்கு உயர்நீதிமன்றம் தீர்வு காணும் வரை  சீருடைகள் தொடர்பாக மாநில அரசு அறி வித்துள்ள விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் செவ்வாயன்று பிற்பகல் விசா ரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் விசாரித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் காமத் வாதிடுகையில், “பள்ளிகளில், யாரோ ஒருவர் நாமம், யாரோ ஒருவர் ஹிஜாப், யாரோ ஒருவர்  சிலுவை அணிந்துள்ளனர், இது நேர்மறை யான மதச்சார்பின்மையைப் பிரதி பலிப்பதாகும்.”  “ஆனால் ஹிஜாப் அணிந்த மாணவர் களை தனித்தனியாக உட்கார வைக்கின்ற னர் இது “மதச் சார்பின்மை” மற்றும் “தீண்டாமை முழுமையாக ஒழிக்கப்பட வில்லை” என்பதைக் காட்டுகிறது. இப்படிப் பிரிப்பது சட்டப்பிரிவு 14-ஐ மீறுவதாகும் என்றார்”. அப்போது குறுக்கிட்ட கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல், “ஹிஜாப் அணியும் குழந்தைகளை தனியாக உட்கார வைப்பது தொடர்பான காம த்தின் கருத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்தார். வாதத்தின் ஒரு கட்டத்தில் தலை யிட்ட நீதிபதி தீக்ஷித், நான் காமத்தின் வாதத்தை மட்டுமே பதிவு செய்கிறேன். உயர்நீதிமன்றக் கட்டடத்தை இடிக்க வேண்டும் என்று அவர் கூறினாலும்,

அதை நான் பதிவு செய்ய வேண்டும் என்றார். அதே நேரத்தில் (அட்வகேட் ஜெனரல்) உங்களது வாதத்தையும் நான் தடிமனான எழுத்துக்களில் பதிவு செய்கிறேன் என்றார். தொடர்ந்து வாதிட்ட காமத், ஹிஜாப்பை எதிர்ப்பது  சட்டப்பிரிவு 25, 19 மற்றும் 14-ன் அடிப்படையில் முழு  உரிமைக்கு எதிரானது. முஸ்லிம் மாண வர்கள் நீண்ட காலமாக ஹிஜாப் அணிந்து கொண்டு வகுப்புகளுக்குச் செல்வதை யும், தேர்வுகள் இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுமென்றார். தொடர்ந்து அட்வகேட் ஜெனரலும் காமத்தும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அப்போது நீதிபதி தீக்ஷித் நான் பொறுமையாக கேட்கிறேன். அர சியலமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு சிறு பிரிவுதான் பிரச்சினையை எரிய வைக்கும். போராட்டம் நடத்துவது,

வீதியில் செல்வது, முழக்கங்கள் எழுப்பு வது, மாணவர்களைத் தாக்குவது, மாணவர்கள் பிறரைத் தாக்குவது போன்றவை நல்ல நடவடிக்கை அல்ல. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், மாணவர்கள்,  மற்றும் பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டுமென நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது எனக்கூறி வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார். அதே நேரத்தில் இந்தக் கல்வியாண்டு முடியும் வரை வாதங்களை நீட்டிக்கக்கூடாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.