states

கர்நாடகத்தில் ஒரு மதநல்லிணக்க நிகழ்வு

பெங்களூரு, ஜூலை 28- கோயில் பூசாரிகள் இணைந்து புதி தாக கட்டப்பட்ட மசூதியை திறந்து வைத்த நிகழ்வு, கர்நாடக மாநிலத்தில் நடை பெற்றுள்ளது. இது சமூக மற்றும் மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இருப்பதாக நாடு முழுவதும் வரவேற்பை யும் பாராட்டையும் பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம் குகானூர் தாலுகாவில் அமைந்திருக்கும் பனாப்பூர் என்ற கிராமத்தில்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இங்கு கோயில் பூசாரி யான ஸ்ரீதர் முருடி மடத்தை சேர்ந்த பசவ லிங்க சிவாச்சார்யா சுவாமிகள் மற்றும் அனந்தேஷ்வர் ஷகா மடத்தை சேர்ந்த  மகாதேவயா ஆகியோர், புதிதாக கட்டப் பட்ட மசூதியை திறந்து வைத்துள்ளனர். மசூதி திறப்பு விழாவுக்கு வந்த பூசாரி களுக்கு மசூதி நிர்வாகிகள் பூக்கள் தூவி யும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்துள்ள னர். நிகழ்வுக்கு பின்னர் பசவலிங்க சிவாச் சார்ய சுவாமிஜி அளித்துள்ள பேட்டியில், “நம்முடைய நடத்தைகள் இளம் தலை முறைகளுக்கு ஓர் உதாரணமாக இருக்க  வேண்டும். நாம் எல்லோரும் இப்படித்தான் இணக்கமாக வாழ வேண்டும். அப்போது தான் சமூகத்தில் அமைதி நிலவும்” என்று கூறியுள்ளார். மகாதேவயா சுவாஜி அளித்த பேட்டி யில், “கிராமங்களில் இந்துக்களும், முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள். எல்லோரும் அனைத்து பண்டிகைகளை ஒற்றுமையுடன்  கொண்டாடி மகிழ்கிறோம். இதுதான் நமக்கு பெருமை” என்று தெரிவித்துள்ளார். நாங்கள் எல்லோரும் குகானூர் கிராமத்தில் சகோதரர்களாக வாழ்ந்து வரு கிறோம். எனவேதான் சுவாமிஜியை மசூதி யை திறக்க அழைத்தோம். முஸ்லிம் சமூகம் எப்போதும் அமைதியையே விரும்புகிறது என்று முஸ்லிம் சமூக தலைவர் முகம்மது அலி கூறியுள்ளார். பாஜக ஆட்சியில், மதவெறுப்பு, வன்முறை, கும்பல் படுகொலை என்றாலே கர்நாடகம்தான் என்றிருந்தது. தற்போது பாஜக தோற்று ஆட்சி மாறியுள்ள நிலை யில், காட்சிகளும் மாறத் துவங்கியுள்ளன.