பெங்களூரு, மார்ச் 21- பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மாவீரர்களான, சிவகங்கை சீமை யைச் சேர்ந்த மருது சகோதரர்களை, உரி கவுடா, நஞ்சே கவுடா எனப் பெயர் மாற்றி, கர்நாடகத் தேர்தலுக்காக பாஜகவினர் மோசடி யில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் 2023 மே மாதத்துடன் முடிவடைவதால், அதற்கு முன்னதாகவே அங்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. கர்நாடகத்தில் கடந்த 2018-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்த லில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக் காத நிலையில், காங்கிரஸ், முதல்வர் பதவி யை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு விட்டுக்கொடுத்தது. ஒக்கலிகர் எனப்படும் கவுடா சமுதாயத்தைச் சேர்ந்த குமாரசாமி முதல்வரானார். ஆனால், 2019-இல் காங்கிரஸ், மதச்சார் பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏ-க்களை குதிரைபேரம் மூலம் வளைத்த பாஜக, அவர் களை பதவி விலகச் செய்து, குமாரசாமி ஆட்சி யைக் கவிழ்ந்தது. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வரானார். ஆனால், பாஜக-வானது, இரண்டு ஆண்டுகளிலேயே எடியூரப்பாவையும் பதவி விலகச் செய்து, பசவராஜ் பொம்மையை முதல்வராக்கியது.
குமாரசாமி, எடியூரப்பா ஆகிய இருவ ருமே, முறையே அவரவர் சார்ந்த கவுடா, லிங்காயத் சமூகத்தின் பிரதிநிதிகளாக பார்க்கப்படும் நிலையில், இருவரின் ஆட்சி யையுமே பாஜக கவிழ்த்தது, கவுடா, லிங்காயத் ஆகிய இரண்டு பெரும்பான்மை எண்ணிக்கையிலான மக்களையும் அதிருப்தி யில் ஆழ்த்தியது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் களம் தொடர்பாக, அண்மையில் லோக் போல் நிறு வனம் நடத்திய கருத்துக் கணிப்பிலும் இது வெளிப்பட்டது. அதாவது, கர்நாடக சட்டப்பேர வைத் தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்றும், காங்கிரஸ் பெரும்பான்மை பலத்து டன் ஆட்சியமைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறின. இதனால் அதிர்ச்சி யடைந்த, பாஜக அவசர அவசரமாக ஒக்க லிகா, லிங்காயத் மக்களை சமாதானப்படுத்தி, அவர்களின் வாக்குகளைக் கவரும் முயற்சி யில் தற்போது இறங்கியுள்ளது.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த ஷிமோகா விமான நிலை யத்திற்கே எடியூரப்பாவின் பெயரை சூட்டுவ தென கர்நாடக அமைச்சரவை முடிவு செய்தது. இதன் அடுத்தகட்டமாக ஒக்கலிகர் எனப்படும் கவுடா சமூகத்தினரைக் கவர்வதற்காக, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எனப்படும் உரி கவுடா, நஞ்சே கவுடா சகோதரர்களை விளம்பரப்படுத்தும் வேலையில் இறங்கி யுள்ளது. இதில்தான் பாஜக தனது மோசடியை அரங்கேற்றியுள்ளது. உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோ தரர்கள் என்பது கற்பனைக் கதாபாத்திரங் கள் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு. ஆனால், இந்த இருவரும் உயிருடன் வாழ்ந்த போராளிகள் என்று கூறுவதுடன், அதையும் தாண்டி, திப்பு சுல்தானையே இவர்கள்தான் படுகொலை செய்தார்கள் என்று பாஜக, சங்-பரிவார கூட்டம் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த பொய்யும், பித்தலாட்டமும் இத்துடன் முடிந்ததா என்றால், இல்லை. சிவகங்கைச் சீமையை ஆண்ட மருதுபாண்டியர்களின் படத்தை வரவேற்பு வளைவுகள், பேனர்களில் போட்டு, இவர்கள் தான் உரி கவுடா - நஞ்சே கவுடா சகோத ரர்கள் என்று மற்றொரு மகாமோசடியையும் அரங்கேற்றியுள்ளனர். பாஜக பொதுச்செயலா ளர் சி.டி. ரவியே, உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா என்று கூறி மருது சகோதரர்களின் படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அண்மையில் கர்நாடக அமைச்சரும் தயா ரிப்பாளருமான முனிரத்னா, கவுடா சகோ தரர்களின் கதையை படமாக எடுப்பதாகவும் இதற்கு அம்மாநில உயர்கல்வி அமைச்சர் அஸ்வத் நாராயணன் கதை எழுத இருப்ப தாகவும் போஸ்டர்களை வெளியிட்டார். அதி லும் மருது சகோதரர்களின் புகைப்படங்க ளையே பயன்படுத்தி இருந்தார்கள். இதற்கு கவுடா சமுதாயத்தினரே எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கியதால், அந்த படத்தின் பணிகளை நிறுத்துவதாக அறிவிக்க வேண்டியதானது. இதன்பிறகும் திருந்தாத- கொஞ்சமும் தங்களை மாற்றிக் கொள்ளாத பாஜக-வினர், மீண்டும் மருது சகோதரர்களின் படத்தைப் போட்டு, அவர்களை உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா என பிரச்சாரம் செய்து வரு கின்றனர். இதற்கு தற்போது நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. சாதி வாக்குகளை ஈர்க்க திட்டமிட்டு பாஜக காய்களை நகர்த்து வதாக ஆதிசுன்சனாகிரி மகாசமஸ்தான மடத் தின் சாமியார் நிர்மலானந்தாவும் பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.