states

img

கட்டாய மதமாற்றத்திற்கு 5 ஆண்டுவரை சிறை

பெங்களூரு, செப்.16- கர்நாடகா மாநில சட்டப் பேரவையில், ‘மதச் சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா’ என்ற பெயரில், ‘கட்டாய மத மாற்றத் தடை’ சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதாவை பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. கர்நாடகாவில் கட்டாய மத மாற்றத் திற்கு எதிராக சட்டம் கொண்டு வருவோம் என தேர்தல் காலத்திலேயே பாஜக வாக்கு றுதி தந்தது. அதனடிப்படையில், ஆட்சி  அமைத்ததுமே அங்கு ‘மதச் சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டம்’ என்ற பெயரில்  மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப் பட்டது. எனினும், சட்ட மேலவையில் பாஜக-வுக்கு பெரும்பான்மை இல்லாத தால் அங்கு இந்த மசோதா நிறைவேறா மல் போனது. இருப்பினும் பாஜக இந்த சட்டத்தை எப்படியாவது இயற்றிவிட வேண்டும் என பிடிவாதமாக இருந்த நிலையில், வியாழனன்று இரு அவைகளிலும் பெரும்பான்மை எண்ணிக்கையைப் பெற்று, நினைத்தபடியே கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிராக  இந்த மசோதாவை கர்நாடகா அரசு கொண்டுவந்துள்ளதாக சட்ட மேலவை யின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரிபிரசாத் குற்றம் சாட்டினார். எனினும், மசோதா நிறைவேறிய நிலை யில், அது தற்போது ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. புதிய சட்டத்தின் படி, கட்டாய மதமாற்றக் குற்றம் உறுதி செய்யப்பட்டால் அந்த நபருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.