states

பரபரப்பாக நடந்து முடிந்த கர்நாடகத் சட்டமன்றத் தேர்தல் கடைசி நேரத் தாக்குதல்களால் நிலைகுலைந்த பாஜக!

பெங்களூரு, மே 10 - கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்  ஒருவழியாக அமைதியாக நடந்து  முடிந்துள்ளது. எனினும், வாக்கு களைப் பெறுவதற்காக, தேர்தலின்  கடைசி நிமிடம் வரை, அதிகாரத்தை யும், பணபலத்தையும் பயன்படுத்தி பாஜக அரங்கேற்றிய தில்லு-முல்லு கள், மதவாதத்தை முன்னிறுத்தி மக்க ளை பிளவுபடுத்த நடத்திய முயற்சிகள்  கர்நாடகத் தேர்தல் களத்தையே ஒரு யுத்தகளமாக மாற்றி விட்டன. பசவராஜ் பொம்மை அரசின் ஊழல், 40 சதவிகித கமிஷன், இரட்டை என்ஜின் அரசு என்ற ஏமாற்று, வேலை யின்மை, சமையல் சிலிண்டர் விலை  உயர்வு, மதவாத அரசியல் என எதிர்க் கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக் கள் எதற்கும் பாஜக தலைவர்கள் பதி லளிக்கவில்லை. மாறாக, எதிர்க்கட்சித் தலைவர்களை - குறிப்பாக, காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோ ரை தனிப்பட்ட முறையில் தாக்கினர்.  பகிரங்க கொலைமிரட்டல் விடுத்தனர்.  கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கலவரம் வெடிக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பயமுறுத்தினார்.

இஸ்லாமியர்க்கான 4 சதவிகித இடஒதுக்கீடு ரத்து; அவர்களிடமிருந்து பறித்துத் தரப்பட்ட 2 சதவிகித இட ஒதுக்கீட்டை ஏற்பதற்கு லிங்காயத்துக் கள் மறுத்துவிட்ட நிகழ்வு, பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட உள்ஒதுக்கீட்டை எதிர்த்து பஞ்சமசாலி பிரிவினர் நடத்திய போராட்டம், 40 சதவிகித கமிஷனால்  அரசு ஒப்பந்ததாரர்கள் செய்துகொண்ட தற்கொலைகள், பாஜக-வை விட்டு ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி உள்ளிட்ட தலைவர்கள் வெளியேறிய சம்பவங்கள் அனைத்தையும் திசைத்திருப்ப பாஜக-வினர் பல வாறு முயற்சி மேற்கொண்டனர். வழக்கம்போல ராமரையும், அனுமனை யும் கையில் எடுத்தனர். பிரதமர் நரேந் திர மோடி ஆரம்பம் முதலே, கர்நாட கத் தேர்தல் பிரச்சாரத்தில் “பஜ்ரங்பலி”  என்ற கோஷத்தை முன்வைத்தார்.  ஆனால், எதுவும் கைகொடுக்க வில்லை. பலநூறு கோடி ரூபாய் பணத்தை வாரியிறைத்து, மக்களுக்கு பரிசுப் பொருட்களை அளித்தும் நம்பிக்கை வரவில்லை. குறிப்பாக, பாஜக பெரிதும் நம்பியிருந்த வீர சைவ லிங்காயத்துகள், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது, பாஜக-வை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியது.

இதனால், கடைசிக்கட்ட முயற்சி களில் இறங்கிய பாஜக, பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம் என தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அளித் த்திருந்த உறுதிமொழியையே, அக்கட்சிக்கு எதிரான ஆயுதமாக்க முடிவுசெய்து, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் அதன் இளைஞர் அமைப்பான பஜ்ரங் தள் மூலம், “ஹனுமன் சாலிசா” வை பாராயணம் செய்ய வைத்தது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் திங்கட்கிழமை மாலை யுடன் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதி வுக்கு முந்தைய நாளான செவ்வா யன்று இந்த வேலையைச் செய்தனர். கர்நாடக முதல்வர் பசவராஜ்  பொம்மையும், தனது ஆதரவாளர்களு டன் ஹூப்ளியின் விஜய் நகரில் உள்ள  ஹனுமன் மந்திருக்குச் சென்று,  ஹனுமன் சாலிசா-வை பாராயணம்  செய்தார். “நாங்கள் அனுமர், ராமர் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அவர்கள்தான் எங்களின் பலம். கர்நா டக மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒன்றிய அமைச்சரும் மாநில பாஜக தேர்தல் நிர்வாகக் குழுத் தலைவரு மான ஷோபா கரந்தலாஜே பெங்களூரு வில் உள்ள வீர் ஆஞ்சநேயா கோவி லுக்குச் சென்று ஹனுமன் சாலிசா  பாடி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷ மிட்டார். கர்நாடகா முழுவதுமே மக்கள் “ஹனுமன் சாலிசா” கோஷமிடு கிறார்கள் என்றும், தர்மத்தைக் காப்பாற்ற ஆஞ்சநேயரிடம் பிரார்த்த னை செய்வதாகவும் அவர் தெரி வித்தார். இதேபோல பாஜக தலை வர்கள் பலரும் மக்களிடம் மதரீதியான வாக்குசேகரிப்பை மேற்கொண்டனர். இந்துக்களாக இருந்தால் நீங்கள் பாஜகவுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற சூழலை ஏற்படுத்த முயன்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மக்களுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதினார். கர்நாடகத்தை நாட்டி லேயே முதல் மாநிலமாக்க (கர்நாடக மக்களின்) ஆசீர்வாதத்தை (வாக்கு களை) எதிர்பார்ப்பதாக பிரதமர் அதில் கூறினார். “கர்நாடகா மாநி லத்தில் உள்ள ஒவ்வொரு குடிமக்க ளின் கனவும் தனது கனவு” என்றும், “உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவை முதல்  3 இடங்களுக்குள் கொண்டு வரும் இலக்கை, தான் கொண்டிருக்கும் நிலை யில், கர்நாடகாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது மட்டுமே அது சாத்தியமாகும்” என்றும் அந்தக்  கடிதத்தில் தேனொழுக கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, காங்கிரஸ் தலை வர்கள் சித்தராமையாவிற்கும், டி.கே. சிவகுமாருக்கும் சிண்டுமுடியும் வித மாக, கடிதம் ஒன்றை வெளியிட்டனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சித்தராமையா எழுதியதாக கூறப்படும் அந்த கடிதத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் முதல்வர் ஆக விரும்புகிறார்; இது என்னையும் எனது ஆதரவாளர்களையும் வேத னையில் ஆழ்த்தியுள்ளது என்று சித்த ராமையா கூறியிருப்பதாக தெரி விக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இதனை உடனடியாக மறுத்த சித்தராமையா, “அது ஒரு போலி கடிதம். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீங்கு விளைவிக்கும் கும்பல் இதை வெளியிட்டுள்ளது. எனக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கும் இடையே மோதலை ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்து உள்ளனர். இந்த போலி கடிதத்தை நிராகரிக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து தேர்தல் ஆணையம் மற்றும் போலீசில் புகார் அளிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். இதனிடையே, கர்நாடக மாநில  அரசு காண்ட்ராக்டர்கள், பாஜக அர சுக்கு எதிராக விடுத்த அறிக்கையும், அதில் காண்ட்ராக்டர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு 40 சதவிகித கமிஷன் அரசு நடத்தும் பாஜக-வை தோற்கடிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் பாஜக  தலைவர்கள் எதிர்பாராத தாக்குதலாக அமைந்தது. இதுதான் நேரமென்று காங்கிரஸ் தலைவர்களும், பாஜக-வுக்கு பதிலடி கொடுக்கும் வேலையில் இறங்கினர்.  வாக்குப் பதிவு துவங்குவதற்கு முன்பாக அடுத்தடுத்து திட்டங்களை அரங்கேற்றினர். “400 ரூபாய்க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, நரேந்திர மோடி ஆட்சியில் 1200 ரூபாய் அளவிற்கு உயர்ந்திருப்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறிய காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், காலி எரிவாயு சிலிண்டருக்கு பூஜை செய்து பாஜக-வினரை அலறவிட்  டார். அதுமட்டுமல்லாமல், “வாக்குச்  சாவடிக்கு செல்லும் முன்பாக பொது மக்கள் அனைவரும் சிலிண்டருக்கு பூஜை செய்து கும்பிட்டு விட்டுச் செல்ல  வேண்டும்” என்று பகிரங்க அழைப்பு விடுத்தார்.

அதன்படியே, வாக்குச்சாவடிகள் அருகே அமைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியினரின் பூத் ஸ்லிப்  வழங்கும் இடங்களில், சிலிண்டர் வைக்கப்பட்டு அதற்கு மாலை அணி வித்தும், ஊதுபத்தி ஏற்றியும் வழிபாடு நடத்தப்பட்டது. வாக்குச்சாவடிக்குச் செல்லும் காங்கிரஸ் கட்சியினர், சிலிண்டரைக் கையெடுத்துக் கும்பிடு வதும், ஊதுபத்தி காண்பிப்பதும் சமூக ஊடகங்களில் வைரலானது.  மேலும், வாக்குப்பதிவு துவங்கு வதற்கு முன்னதாகவே அதிகாலையி லிருந்து ‘பைபை பிஜேபி (#byebyebjp) தொடங்கி, பேசிஎம் (#paycm) வரை பல முக்கிய ஹேஷ்டேக்குகளை காங்கிரஸ் கட்சியினர் டிரெண்டாக்கி னர். “காங்கிரஸ் 150 இடங்களில் வெல்லும்” (#CongressWinning150), பாஜகவிற்கு ஓட்டு இல்லை  (#NoVoteToBJP)  என்ற முழக்கத்தையும் சமூகவலை தளங்களில் டிரெண்டாக்கினர். இவை அனைத்தும் பாஜக-வினரை அதிர்ச்சி யில் உறைய வைத்தது. பெங்களூருவில் உள்ள சாந்தி நகர்  செயிண்ட் ஜோசப் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச் சாவடியில் காலை யிலேயே சென்று வாக்களித்த நடிகர் பிரகாஷ் ராஜ், அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், “மக்கள் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக  வாக்களிக்க வேண்டும்.. கர்நாடகா வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நேரம் இது.. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்கு தெரியும்; கர்நாடகா அழகான மாநிலமாக இருக்க வேண்டும்.. நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே தனது விருப்பம்” என்று கூறியதுடன், “காலை வணக்கம் கர்நாடகா.. நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிரான வன்.. 40 சதவிகித ஊழல்வாதிகளுக்கு எதிராக, நான் என் வாக்கைப் பதிவு செய்துள்ளேன். நீங்களும் உங்கள் மனசாட்சியுடன் வாக்களித்து, கர்நாடகம் அமைதிப் பூங்காவாக திகழச் செய்ய வேண்டும்..” என்றும் “கையை குலுக்கலாம், தென்னைக் குருத்தை தலையில் வைக்கலாம். ஆனால் தாமரைப் பூவை காதில் வைக்க முடியாது” என, கட்சிகளின் சின்னத்தை மறைமுகமாக சுட்டிக் காட்டி, பாஜக-வுக்கு எதிராக டுவிட்ட ரில் கருத்துக்களைப் பதிவிட்டார். இதை யொட்டி பிரகாஷ்ராஜ் (#PrakashRaj) என்ற ஹேஷ்டேக்கும் அகில இந்திய அளவில் சமூகவலைதளங்களில் டிரெண்டானதால் அதிர்ச்சியடைந்தது பாஜக.