states

கர்நாடகாவில் காலியாகும் பாஜக கூடாரம்...

பெங்களூரு, ஏப்.15- கர்நாடக பாஜகவுக்குள் ரத்தக்களறி ஏற்  படாத குறையாக பெரும் கலகம் மூண்டுள்ளது. போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத பல ரும் தங்களின் எம்எல்ஏ மற்றும் எம்எல்சி பதவி களை ராஜினாமா செய்து விட்டு பாஜகவிலி ருந்து வரிசையாக வெளியேறத் துவங்கியுள்ள னர். சீட் கிடைக்காத பாஜக தலைவர்களின் ஆத ரவாளர்கள், பாஜக அலுவலகங்களை முற்று கையிட்டும், டயர்களைக் கொளுத்திப் போட்டும் வன்முறையில் இறங்கியுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மீண் டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களில், தற்போதைய அமைச்சர்களான எஸ். அங் காரா, ஆனந்த்சிங், முன்னாள் முதல்வர் ஜெக தீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லட்சு மண் சவதி, முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ்.  ஈஸ்வரப்பா, அரவிந்த லிம்பாவளி, எஸ்.ஏ. ராம தாஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் மதல் விரு பாக்‌ஷப்பா, எம்.பி. குமாரசாமி, சி.எம் நம்பன்ன வர், எஸ்.ஏ. ரவிந்திரநாத், நேரு ஹோளேகர், என்.  லிங்கண்ணா, சுகுமார் ஷெட்டி, பரமுமுன வள்ளி, களகப்பா பண்டி, கூளிஹட்டி சேகர்  உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவார்கள்.  பாஜக தலைமையின் நடவடிக்கையால் இவர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.  தற்போது மீனவர் நலன் மற்றும் துறை முகங்கள் துறை மந்திரியாக உள்ள எஸ். அங்  கார், சுள்ளியா தொகுதியில் அவர் 6 முறை  போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். அவ ருக்கு இந்தமுறை பாஜக தலைமை சீட் வழங்கா ததால், அரசியலில் இருந்தே விலகுவதாக அறி வித்துள்ளார். “அரசியலில் நேர்மைக்கு இடம்  இல்லை” என்று விரக்தியையும் வெளிப்படுத்தி யுள்ளார். இவர், இந்த தேர்தலில் பாஜக-வை ஆத ரித்து பிரச்சாரம் செய்ய மாட்டார் என்றும் அவ ரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.

எனக்கு ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும்

இதேபோல முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் பெயர், 2-ஆவது பட்டியலிலும் பெயர் வெளியாகாததால், “பாஜக தனக்கு மரி யாதை அளிக்கவில்லை” என்று கொந்த ளித்துள்ளார். “பாஜக சீட் ஒதுக்காவிட்டாலும் கர்நாடகத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி” என்று கூறியுள்ள ஷெட்டர், “ஏப்ரல் 15-க்குள் 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும்; அவ்வாறு வெளியிடாவிட்டால், ஆத ரவாளர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்றும் பாஜக தலைமையை எச்சரித்துள்ளார். ஒதுங்கிக் கொண்ட ஈஸ்வரப்பா கர்நாடக பாஜகவில் செல்வாக்கு மிகுந்தவ ரும் துணை முதல்வர் பதவி உட்பட 4 முறை  அமைச்சர் பதவி வகித்தவருமான கே.எஸ். ஈஸ்வரப்பாவுக்கும், அவரது மகன் சந்தோ ஷூக்கும் சீட் வழங்க முடியாது என பாஜக  மேலிடம் கூறி விட்டதால், “தேர்தல் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகுகிறேன்’’ என அறி வித்துள்ளார்

காங்கிரசில் இணைந்தார்  லட்சுமண் சவதி

அத்தாணி தொகுதியில் 3 முறை எம்எல்ஏ வாக இருந்தவரும் முன்னாள் துணை முதல்வ ருமான லட்சுமண் சவதி, தனக்கு சீட் கிடைக்கா ததால் பகிரங்கமாக கண்ணீர் விட்டு கதறினார். “நான் யாரிடமும் சென்று பிச்சை எடுக்க மாட் டேன். எனக்கு சுயமரியாதை உள்ளது” என்று கூறிய அவர், தனது எம்எல்சி பதவியை ராஜி னாமா செய்த கையோடு, முன்னாள் முதல்வர்  சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே. சிவ குமார், மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, பிரசாரக் குழு தலைவர் எம்.பி. பாட்டீலை சந்தித்து காங்கிரசிலும் இணைந்து விட்டார். ரனேபெண்ணூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்த ஆர். சங்கர், தனது சட்ட  மேலவை உறுப்பினர் பதவியையும், முடிகெரே தொகுதி எம்.பி. குமாரசாமி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய் துள்ளனர். மூத்த தலைவர்கள் எம்.கே. பட்டண ஷெட்டி, மஹாந்தேஷ் மமதாபுரா ஆகியோர் பாஜகவுக்கு பாடம் புகட்டும் வகையில் வரும் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவோம் என்றும் அறிவித்துள்ளனர். தார்வார் ஊரக தொகுதியில் குறிவைத்திருந்த மூத்த தலை வர் தவனப்பா அஷ்டகி, வாய்ப்பு கிடைக்காத தால், பாஜகவுக்கு முழுக்குப் போட்டுள்ளார். இதனிடையே, கர்நாடகத் தேர்தலில் சீட்  கிடைக்காத பாஜக தலைவர்களின் ஆதரவா ளர்கள், தேசிய தலைமையின் முடிவுக்கு எதி ராக அந்தந்த தொகுதியில் உள்ள பாஜக அலு வலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கே.எஸ். ஈஸ்வரப்பாவிற்கு வாய்ப்பு வழங்  காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிமோகா மாநக ராட்சி பாஜக கவுன்சிலர்கள் 50-க்கும் மேற் பட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வ தாக கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதி மிரட்டல் விடுத்துள்ளனர். பெங்களூரு நகர காவல்துறை முன்னாள் ஆணையரான பாஸ்கர் ராவை, சாம்ராஜ்நகர் தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சுனில் குமார் என்கிற ‘சைலண்ட்’ சுனிலின் ஆதரவாளர்கள் பெங்க ளூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஹொசதுர்கா நகரில் தற்போதைய எம்எல்ஏ கூளிஹட்டிசேகருக்கு சீட் வழங்காததை கண் டித்து, அவரது ஆதரவாளர்கள் சாலையில்  டயர்களைக் கொளுத்தி தங்கள் எதிர்ப்பை தெரி வித்தனர். இதேபோல் அமைச்சர் அங்காரா ஆத ரவாளர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ள னர். வேட்புமனு துவங்கிவிட்ட நிலையில், செல்  வாக்கு மிக்க தலைவர்கள் பாஜகவுக்கு முழுக்  குப் போட்டு விட்டு அடுத்தடுத்து வெளியேறுவது டன், பலர் சுயேட்சையாகவும் போட்டியிட முடிவு  செய்திருப்பதால், பாஜக தலைமை அதிர்ச்சி  அடைந்துள்ளது. இது தேர்தல் முடிவுகளில் தங்க ளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதும் பாஜக தலைமை, அதிருப்தி தலை வர்களில் சிலருக்கு இன்னும் அறிவிக்கப்படாத 12 தொகுதிகளில் வாய்ப்பு வழங்கலாமா? என  ஆலோசிக்கத் துவங்கியுள்ளது.