பெங்களூர், பிப்.9- இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதை காரணமாக வைத்து, கர்நாடக மாநில கல்வி நிலையங்களின் அமைதியை சங் பரிவார் அமைப்புகள் குலைத்துள்ள னர். பல்வேறு மாவட்டங்களை கல வரக் காடாக மாற்றியுள்ளனர். உடுப்பி மாவட்டம், குந்தாபுரா வில் உள்ள அரசு பிரீ யுனிவர்சிட்டி கல்லூரியில் முதன்முதலாக ஹிஜாப் (முக்காடு)அணிவதற்கு எதிராக சங் பரிவார் அமைப்புக்களைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். கல்லூரி நிர்வாகம் அவர் களின் மிரட்டலுக்குப் பயந்து ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித் தது. ஆனால், இந்த அடக்குமுறை யை ஏற்காத இஸ்லாமிய மாணவி கள் 6 பேர், எப்போதும் போல ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இதையொட்டி, இஸ்லாமிய மாணவியரை கல்லூரிக்குள் அனு மதிக்கக் கூடாது என்று மிரட்டிய சங்-பரிவாரைச் சேர்ந்த மாணவர் கள், ஹிஜாப்புக்கு போட்டியாக காவித்துண்டு அணிந்து கலகத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணியும் இஸ் லாமிய மாணவிகள் மீது தாக்குதல் முயற்சியிலும் இறங்கினர். உடுப்பி மாவட்ட கல்வி நிலை யங்களில் மட்டுமல்லாது, சிவ மொக்கா, பாகல்கோட், தாவண கெரே, கதக், மண்டியா, ஹாசன், விஜயபுரா மாவட்ட கல்வி நிலை யங்களிலும் வன்முறையில் இறங்கி னர். சிவமொக்காவில் இருக்கும் அரசு பியூ கல்லூரி ஒன்றில், புர்கா அணிந்து வந்த மாணவிகள் மீது இந்துத்துவா மாணவர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இத னால், அங்கு மாணவ - மாணவியர் இடையே வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தி அங்கு மாணவர்களை கலைத்தனர். சிவமொக்கா டவுன் பி.எச். சாலை யில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரி யிலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவ-மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது மாண வர் ஒருவர், கல்லூரியில் உள்ள தேசியக்கொடி கம்பத்தில் ஏறி, காவிக் கொடியை ஏற்றினர். கீழே இருந்த மற்ற மாணவர்கள் காவித் துண்டை கையில் வைத்துக் கொண்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூச்ச லிட்டனர். போலீசார் அந்தக் காவிக் கொடியை அகற்றி மீண்டும் தேசியக் கொடியை ஏற்றினர். சிவமொக்கா மாவட்ட கல்லூரிகளில் நடந்த கல் வீச்சு சம்பவத்தில் மட்டும் 20 இரு சக்கர வாகனங்கள், 10 கார்கள் சேத மடைந்தன. மேலும் 10-க்கும் மேற் பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர சிவமொக்கா மாவட்டத்தில் தற் போது 144 தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்டு உள்ளது. பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரி வளாகத்துக் குள் அத்துமீறி நுழைய காவித் துண்டு அணிந்த மாணவர்கள் முயன் றனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை எழுந்தது. தாவணகெரே மாவட்டம், ஹரிஹராவிலும் நிலைமை மோசமடையவே மாண வர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர். ஹாசன், கதக், மாண் டியா, விஜயபுரா மாவட்டங்களில் கலவரத்தில் ஈடுபட்ட சங்-பரிவாரி களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மாண்டியா பிஇஎஸ் கல்லூரிக்கு முஸ்கான் என்ற இஸ்லாமிய மாணவி ஒருவர், புர்கா அணிந்து தனியாக வந்த நிலையில், அவரைக் கண்ட தும் காவித் துண்டு அணிந்த மாண வர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று வெறிக்கூச்சல் போட்ட னர். சங்-பரிவார் மாணவர்களின் இந்த வன்முறையால், கர்நாடக மாநில பிரி யுனிவர்சிட்டி கல்லூரி களுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.