states

சனாதனம் நாட்டின் சட்டமானால் 90% இந்தியர்கள் அடிமைகள் ஆவர்! சித்தராமையா எச்சரிக்கை

பெங்களூரு, செப்.16- இந்தியாவின் அரசியல மைப்புச் சட்டத்தை அழித்து விட்டு சனாதன தர்மத்தையே இனி இந்திய அரசியல் சாச னமாக பாஜக நடைமுறைப் படுத்தும்; அப்படி நடை முறைப்படுத்தினால் 90 சத விகித இந்தியர்கள் அடிமை களாக நடத்தப்படுகிற அபா யம் உருவாகும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா எச்ச ரிக்கை மணி அடித்துள்ளார்.  கர்நாடகத்தில் அரசி யலமைப்புச் சட்ட முகவுரை யை வாசிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. பெங்களூரு சட்டப் பேரவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை  முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் பள்ளி மாணவர்கள் பெருமளவு பங்கேற்றனர். விதான் சவுதா முன்பாக அனைவரும் அரசியல் சாச னத்தின் முகப்பு பக்கத்தை வாசித்தனர். கர்நாடகா முதல்  வர் சித்தராமையா உரை யாற்றினார்.  “போபாலில் பேசிய பிர தமர் மோடி, சனாதன தர்  மத்தை ஆதரித்து பேசுகிறார். சனாதன தர்மம்தான் இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் என்கிறார். இந்தியா வின் அரசியல் சட்டம் ஒழிக் கப்பட்டு இவர்கள் பேசுகிற சனாதன தர்மம்- மனு தர்மம்  அமலுக்கு வந்தால் தேசத்தின் 90 சதவிகித மக்கள் அடிமை களாக்கப்படுவர். இதற்கான  சதிகளைத்தான் முன்னெ டுத்துக் கொண்டிருக்கின்ற னர். ஜனநாயக கோட்பாடு கள் புத்தர், பசவண்ணர் காலத்தில் இருந்து இந்திய மண்ணில் நிலை பெற்ற ஒன்று. எனவே, அரசியல் சாச னத்துக்கு எதிரான சக்திகளின் சதிகளை இணைந்து முறி யடிப்போம்” என்று அப் போது சித்தராமையா குறிப் பிட்டார்.