பெங்களூரு, ஏப்.1- கர்நாடக சட்டப்பேரவை பதவிக் காலம் மே 24-ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கள் எம்.ஏ.பேபி, பி.வி.ராகவலு, மாநிலச் செயலாளர் யு.பசவராஜு ஆகியோர் பங்கேற்ற அரசியல் விளக்க பொதுக் கூட்டத்தில், பாகேபள்ளி தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளராக டாக்டர் அனில் குமார் அறிவிக்கப் பட்டார். அவரை அறிமுகம் செய்து தேர்தல் பிரச்சாரமும் துவங்கியது.