states

img

மாநில அளவில் முதலிடம் பெற்று பதிலடி கொடுத்த இஸ்லாமிய மாணவி

பெங்களூரு, ஏப்.29- ‘ஹிஜாப் அணியத் தடை’ என்ற பெயரில் இஸ்லாமிய மாணவிகளின் கல்வி யைப் பறிக்க முயற்சித்த பாஜக அரசுக்கு எதிராக, ‘அல்லா ஹு அக்பர்’ என முழக்க மிட்டு, போராட்டத் தீயை மூட்டிய மாணவி,  மேல்நிலைக் கல்வித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார்

ஹிஜாப் பிரச்சனை

கர்நாடகத்தில் அதிகாரத்தில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ்சின் துணை மதவெறி அமைப்புகளான ஏபிவிபி, விஎச்பி, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் உதவி யுடன், இந்துத்துவா மூளைச் சலவையில் சிக்கியுள்ள மாணவர்களை வைத்து கடந்த 2021-ஆம் ஆண்டு இறுதியில் (டிசம்பர்) உடுப்பியில் உள்ள பியு கல்வி  நிலையத்தில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என இஸ்லாமிய மாணவி களை மிரட்டினர். மேலும் இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்பு உள்ள மாண வர்கள் “காவி” உடையுடன் வந்து கல்வி நிலையங்களில் கலவரச் சூழலை ஏற்படுத்தினர்.  உடுப்பி கல்லூரியில் தபசும் ஷேக் என்ற மாணவி,  ஹிஜாப் அணிந்து வந்த போது, மதவெறி பிடித்த கயவர்கள் அப்பெண்ணைச் சூழ்ந்து கொண்டு ரகளை செய்தனர். அப்போது, ஒற்றை ஆளாக அவர்களை எதிர்த்து நின்று, ‘அல்லா ஹு அக்பர்’ என்று உரத்த குரலில் கோஷ மிட்டு, ஆவேசப் போராட்டத்தை நடத்தி னார்  தபசும் ஷேக். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடுப்பி யில் இருந்து படிப்படியாக மாநிலம் முழு வதும் ஹிஜாப் தடை எதிர்ப்பு போராட்டம் பரவ, கல்வி நிலையங்களில் ‘மத அடை யாளமான’ ஹிஜாப்பை அனுமதிக்க முடியாது என கர்நாடகா பாஜக அரசு பிடிவாத மாக உத்தரவிட்டது. இந்த தடையை நீக்கக்கோரி முஸ்லிம் மாணவிகள் சிலர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், அரசுப் பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்றும் மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்றும் கூறி மாணவிகளின் வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

தேர்வில் முதலிடம்

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் பியுசி 2-ஆம் ஆண்டு தேர்வு முடிவு கடந்த ஏப்.,21 அன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவில் மாணவி தபசும் ஷேக், கலைப் பிரிவில் 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

தந்தையின் அறிவுரை

இதுதொடர்பாக தி டெலிகிராப் செய்தி  நிறுவனத்திற்கு தபசும் ஷேக் அளித்த பேட்டியில், “ஹிஜாப் தடை குறித்த அறிவிப்பு  வந்ததும் இந்த விவகாரத்தை பெற்றோர் என்னிடம் விளக்கிக் கூறினர். எனது மதம்  மற்றும் கல்வி ஆகிய இரண்டில் ஒன்றை  நான் தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தத்து க்கு ஆளாகியிருந்தேன். ஹிஜாப் அணிவது எனது அடையாளம் மற்றும் மதத்தின் ஒரு  பகுதி. அப்படியிருக்கும்போது இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்படுவது, அதுவும் மதச்சார்பற்ற நாட்டில் நியாய மற்றதாக எனக்கு தோன்றியது. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினேன். இரண்டு வாரங்களாக கல்லூரிக்குச் செல்ல வில்லை. தனது பியு கல்லூரியில் படித்த  பல மாணவிகள் ஹிஜாப் விவகாரத்தால், கல்லூரியை விட்டு வெளியேறி, திறந்தநிலை கல்லூரிகளில் சேர ஆரம்பித்தனர். ஆனால் நான் ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்கு செல்ல முடியாது என தந்தையிடம் கூறி னேன். அதை கேட்ட எனது தந்தை என்னை  அருகில் அழைத்து, ‘கல்விதான் சரியான  பாதை. நீ சமூகத்தில் ஒரு நிலையை அடைய வும், உன்னை போல மற்றவர்களை உயர்த்தவும் கல்வி மட்டுமே ஒரே ஆயுதம். இதுபோன்ற அநீதிகள் மீண்டும் சமூகத்தில் நிகழாமல் தடுக்க நீ கண்டிப்பாக படிக்க வேண்டும். உன் வார்த்தையை பிறர் கேட்க,  நீ அதிகாரத்தில் இருக்க வேண்டும்’ எனக்  கூறினார். அவரது அறிவுரைக்கு அடுத்த நாளே முதன்முறையாக ஹிஜாப் அணியா மல் கல்லூரிக்கு சென்றேன். மனவேதனை யுடன் இருப்பதை அறிந்த எனது நண்பர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். முதல் ஆண்டு சீராகவே சென்றது. ஆனால் ஆண்டின் இறுதியில் நிறைய சிரமங்களும், நிச்சயமற்ற தன்மைகளும் வந்து போயின. இருப்பினும் பெற்றோர் ஆதரவுடன் படிப்பி ல் கவனம் செலுத்தினேன்” எனக் கூறினார்.

ஆர்.வி. பல்கலைக்கழகத்தில் சீட்

பியு கல்லூரியில் படித்த மாணவி தபசும்  ஷேக்குக்கு, பெங்களூரு ஆர்.வி. பல் கலைக்கழகத்தில் சைக்காலஜி துறையில் படிக்க அட்மிஷன் கிடைத்துள்ளது. இது குறித்து தபசும் ஷேக் கூறுகையில், “உளவியல் படிப்பை படித்து மனநலம் தொடர்பான பணியை செய்ய ஆர்வமாக உள் ளேன். இளங்கலை முடித்து முதுகலைப் பட்டம் பெற்று, மருத்துவ உளவியலில் (clinical psychology) நிபுணத்துவம் பெற விரும்புவதாக” தெரிவித்தார்.

ஹிஜாப் போராட்டம் முதல்  மாநில அளவில் முதலிடம் வரை 

மாணவி தபசும் ஷேக் 5 வயதில் இருந்து ஹிஜாப் அணிந்து வருகிறார். இன்று ஹிஜாப் அவரது அடையாளத்தின் ஒரு பகுதி யாக மாறிவிட்டது. கல்லூரிக்கு வெளியே ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் செல்லும் முன் ஹிஜாப்பை கழற்றி கல்வி பயின்ற தப சும் ஷேக், ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கோரி சட்டப்போராட்டம் நடத்திய மாணவி களில் முக்கிய நபராக இருந்தவர் ஆவார்.  எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரான அப்துல் காம் ஷேக் மற்றும் பர்வீன் ஷேக் ஆகியோ ரின் இரண்டாவது குழந்தை தபசும். அவ ரது மூத்த சகோதரர் அப்துல் கலாம் ஷேக் பெங்களூருவில் எம்டெக்  படித்துவருகிறார். கர்நாடகாவில் பாஜக அரசால் ஜோடிக்கப்பட்ட ஹிஜாப் விவகாரம் எப்படி  நாடு முழுவதும் பரபரப்பான நிகழ்வாக மாறி யதோ, தற்போது அதைவிட டிரெண்டிங் சம்பவமாக மாறியுள்ளது “ஹிஜாப் தடை” என்ற காயத்துடன் மாநில அளவில் முத லிடம் பிடித்த மாணவி தபசும் ஷேக்கின் அசத்தல் மதிப்பெண்கள்.

பியுசி என்றால் என்ன?

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பள்ளி படிப்புக்குச் சமமானதுதான் கர்நாடகாவின் பியுசி படிப்பு ஆகும். கர்நாட காவில் 11-ஆம் வகுப்பை பியுசி முதலாம் ஆண்டு எனவும், 12-ஆம் வகுப்பை பியுசி இரண்டாம் ஆண்டு எனவும் அழைப்பார்கள். முக்கியமாக தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு வரை கல்வி நிறுவனங்களை பள்ளி கள் என்று அழைக்கும் வழக்கம் உள்ள நிலை யில், கர்நாடகாவில் பியூசி படிப்பு நிறு வனங்களை கல்லூரி (பியு கல்லூரி) என அழைக்கிறார்கள். பியூசி 2-ஆம் ஆண்டு தேர்வை எழுதிய 7.02 லட்சம் மாணவ, மாணவியர்களில் 5.24 லட்சம் பேர் அதாவது 74.67% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.  இதில் காமர்ஸ் பிரிவில் அனன்யா என்ற மாணவி 625-க்கு 600  மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடமும், எஸ்.எம்.கௌசிக் என்ற மாணவர் அறிவியல் பிரிவில் 600-க்கு 596 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடமும், தபசும் ஷேக் கலைப்பிரிவில் 600-க்கு 593 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளனர்.