states

சந்தன மரம் வளர்ப்பு கட்டுப்பாடு தளர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்

தற்போதைய சூழ்நிலையில் புதுப்புது குளியல் சோப்புகள் வந்தாலும் பாரம்பரியமான மைசூர் சாண்டல் சோப் இன்னும் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த சோப்பை தயாரிப்பது கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (கேஎஸ்டிஎல்) மாநில அரசு நிறு வனம். சந்தன எண்ணெய்யை இயற்கையாக பயன்படுத்துவதால் மைசூர் சாண்டல் சோப்பு வகை களின் விலை கொஞ்சம் (ரூ.30க்கு மேல்) அதிகமாக உள்ளது. முக்கிய மாக சர்வதேச அளவில் இயற்கை யான சந்தன எண்ணெய்யை சோப்பு உற்பத்திக்கு பயன்படுத் தும் ஒரே நிறுவனம் என்ற பெயரை  மைசூர் சாண்டல் சோப் நிறுவனம்  காலங்காலமாக தக்கவைத்துள் ளது. சமீபகாலமாக கர்நாடகாவில் சந்தன மரங்களை வெட்டுவதும், கடத்துவதும் அதிகரித்து வந்ததால், ஆஸ்திரேலியாவில் இருந்து சந்தன எண்ணெய் இறக்குமதி செய்து சோப்பு உற்பத்தியை சமா ளித்து வருகிறது.   மைசூர் சாண்டல்  சோப் நிறுவனத்தை காப்பாற்ற கர்நாடக அரசு முன்பு, “மாநிலத்தில்  சந்தன மரம் எங்கு வளர்ந்தாலும்,  வீட்டில் சந்தன மரத்தை வளர்த்தா லும் அது அரசுக்கு சொந்தமான தாக கருதப்படும்” உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் விவசாயி கள் சந்தன மரங்களை வளர்ப்ப தில் ஆர்வம் காட்டாமல் இருந்த நிலையில், சித்தராமையா தலை மையிலான காங்கிரஸ் அரசு விவ சாயிகள் சந்தன மரங்களை வளர்ப்  பதை ஊக்குவிக்கும் வகையில் சந்தன மரம் அரசுக்கு சொந்தம் என்ற சட்டத்தை கர்நாடக அரசு  நீக்கியுள்ளது.  இதன் மூலம் விவ சாயிகள் தங்கள் சொந்த வயல் களில் சந்தன மரங்களை வளர்க்க லாம் என்றும், 20 ஆண்டுகளுக்கு பிறகு வளர்ச்சியடைந்த சந்தன மரங்களை கர்நாடக வனத்துறை அல்லது கேஎஸ்டிஎல்க்கு விற்க லாம் என்றும் கர்நாடக அரசு அறி வித்துள்ளது. 

அரசு - விவசாயிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கர்நாடக மாநிலத்தில் சந்தன  மரங்களை வளர்க்க 700 விவசாயி களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்க ளில் கையெழுத்திட்டு, 4,000 ஏக்கர் நிலத்தில் சந்தன மரங்களை வளர்க்க அரசாங்கம் ஒரு தோட்ட இயக்கத்தை தொடங்கியுள்ளதாக நடுத்தர தொழில்கள் மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தகவல் தெரிவித்துள்ளார். சந்தன மரம் வளர்ப்பு தொடர்பான கர்நாடக அர சின் இந்த அறிவிப்பு விவசாயிகள்  மத்தியில் வரவேற்பையும் மகிழ்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மைசூர் சாண்டல் சோப்பு உற்பத்தி யை கவனித்து வரும் மாநில அரசு  நிறுவனமான கேஎஸ்டிஎல் நிறுவன மும் அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.