states

கர்நாடக மாநிலம் வளர்ச்சியடையாததற்கு ஊழல் தான் காரணம்: நீதிபதி பி.எஸ்.பாட்டீல்

பெங்களூரு, ஏப்.22- ஊழல் சமூகத்தில் அச்சுறுத்த லாக உள்ளது. அது நிர்வாகத்தை யும்  பாதித்துள்ளது. கர்நாடக மாநி லத்தில் எதிர்பார்த்தபடி வளர்ச்சி நடக்காததற்கு ஊழல்தான் கார ணம் என்றார் லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல்.  கர்நாடகத் தலைநகர் பெங்களூ ருவில் நடந்த ஊடக நிகழ்ச்சி ஒன்  றில் கலந்துகொண்ட அவர் பேசி யது:  கர்நாடகாவில் மட்டுமல்ல, நாடு  முழுவதும், ஊழல் புற்றுநோயைப் போல அரித்து வருவதால் நிர்வா கத்தின் செயல்திறனை மெல்ல மெல்ல தின்று (வளர்ச்சி பாதிக்கி றது) கொண்டிருக்கிறது. ஊழல் காரணமாக கர்நாடக மாநிலம் அது அடைந்திருக்க வேண்டிய வளர்ச்சியை அடையவில்லை.  ஊழல் மலிந்துவிட்டது. மலிந்து விட்ட ஊழல் நேர்மையான அதி காரிகளை சோர்வடையச் செய் துள்ளது. ஏனெனில் அனைவரும் ஊழல்வாதிகள் அல்ல. ஊழலை அந்தந்த நிறுவன மட்டத்தில் எதிர்த்துப் போராடுவது முக்கியம். ஊழல் என்ற அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து பதிலளித்த நீதிபதி பி.எஸ். பாட்டீல், “இந்தச் செயலுக்கு கார ணமானவர்கள் யாராக இருந்தா லும், அவர் மிக உயர்ந்த நபராக இருந்தாலும். சம்பந்தப்பட்ட நிறு வனங்கள் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் பிரச்சனைகள் மீது அரசு அதிகாரிகளே  நடவடிக்கை எடுக்க லாம். அதற்கான ஏற்பாடுகள் நமது  அமைப்பில் உள்ளது. இதுபோன்ற  நடவடிக்கைகளை நாங்கள் கடந்த காலங்களில் எடுத்துள்ளோம்.

மோசமான முன்னுதாரணம்

அரசு ஒப்பந்ததாரரிடம் இருந்து  ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக் கில் மார்ச் 2-ஆம் தேதி பாஜக சட்ட மன்ற உறுப்பினர் மடல் விரு பக்ஷப்பா  கைது செய்யப்பட்டார். அவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால், அவர் விடுதலையானபோது அவருக்கு  அளிக்கப்பட்ட வரவேற்பு மிக மோச மான முன்னுதாரணம். இதுதான் ஊழலை ஊக்குவிக்கும் என்றார். விருபக்ஷப்பாவுக்கு ஜாமீன் வழங்கியது நியாயமானதா என்ற  கேள்விக்கு பதிலளித்த நீதிபதி பி.எஸ்.பாட்டீல், அதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம், நீதிமன்றங்கள் அவற்றின் வேலையைச் செய்  கின்றன, நீதிமன்றத்தின் செயல் பாடுகள் குறித்து கருத்து தெரி விப்பது நல்லதல்ல என்றார். நாங்கள் மக்களுக்காக கால நேரம் பார்க்காமல் பணியாற்றத் தயாராக இருக்கிறோம். நீதியை  நிலைநாட்ட நானும் எனது ஊழி யர்களும் நிறைய தருணங்களில் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணி யாற்றியுள்ளோம்.  ஓர் அரசு அதிகாரி வேலையில் காட்டும் அலட்சியம், கடமையைச்  செய்வதில் காலம் தாழ்த்துதல்,  வேறேதும் ஆதாயம் எதிர்பார்த் தல், மருத்துவமனைகளின் அவ லம் என எதுவாக இருந்தாலும் மக்  கள் அதைப் பற்றி புகார் கூற முன்வர வேண்டும். 

மாநிலத்தின் நிலைமை மேம்பட்  டுள்ளதா என்பது குறித்துப் பேசிய  நீதிபதி பி.எஸ்.பாட்டீல், “நான் பல  மருத்துவமனைகளை ஆய்வு  செய்தேன், ஊழியர்களின் வேலை யில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிந்தேன். நாங்கள் நடவ டிக்கை எடுத்தோம், இப்போது நிலைமை மாறியுள்ளது என்றார். முதல்வர் கூட பயப்பட வேண்டும் லோக் ஆயுக்தாவை கண்டு  முதல்வர்கள் பயப்பட வேண்டுமா?  என்ற கேள்விக்கு பதிலளித்த நீதி பதி பி.எஸ்.பாட்டீல், “அரசியல் வாதிகளின் மனதில் நான் பயத்தை  ஏற்படுத்தவில்லை. ஆனால், ஊழல் செய்வதில் ஈடுபட்டால், முதல்வர் கூட சட்டத்தைக் கண்டு  பயப்பட வேண்டும் என்ற உண்மை களை முன்வைக்கிறேன். ஊழலில்  ஈடுபடும் யாரையும் லோக் ஆயுக்தா விட்டுவைக்காது. ஊழல் புற்றுநோயாக இருக்க லாம். நாம் அதை எதிர்த்துப் போராடவேண்டும். பொதுமக்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடு பவர்களை அச்சுறுத்த வேண்டும்.  சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களுக்குப் பின்னால் நிற்க வேண்டும் என்றார்.