states

கர்நாடகத்தில் காங்கிரசே ஆட்சியமைக்க வாய்ப்பு!

பெங்களூரு, பிப். 25 - கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் - மே மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கர்நாடகத்தில் இம்முறை பாஜகவுக்கு 60 முதல் 80 இடங்கள் வரையே கிடைக்கும் என்றும், அதேநேரம் காங்கிரஸ் 120 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களைப் பெற்று ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 இடங்கள் உள்ளன. இதில் 113 இடங்கள் என்ற பெரும்பான்மை எந்த கட்சிக்கு கிடைக்கிறதோ, அவர்கள் ஆட்சியமைப்பார்கள். கர்நாடகத் தேர்தல் களத்தை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி யாக அமைந்துள்ளது. இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று தில்லியை சேர்ந்த மூத்த பத்திரி கையாளர் ஒருவர் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள் ளார். அதில், 2022 தேர்தலில் பாஜகவுக்கு 60 முதல் 80  தொகுதிகள் வரையே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அதேநேரம் காங்கிரஸ் 80 முதல் 90 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்க ளில் வெல்லக்கூடும் என்று கூறியிருக்கும் அவர், காங்கிரஸ்  கட்சி 120 இடங்களை கூட தாண்டினாலும் ஆச்சரியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜகவிற்கு மட்டும் தனிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார். கர்நாடகா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனங்களும் தனியாக ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி யுள்ளன. அதில், காங்கிரஸ் 108 முதல் 114 இடங்களில் வெல்லும் என்று தெரியவந்துள்ளது. பாஜக 65 முதல் 75 இடங்களில் வெல்லும். மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 34 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.  வாக்குகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் 38.14 முதல் 40 சதவிகித வாக்குகளை பெறக்கூடும். பாஜக கடந்த முறையை காட்டிலும் 2.35 சதவிகிதம் குறைவாக 34 சதவிகித வாக்குகள் பெறும். மதச்சார்பற்ற ஜனதா தளம் 17 சதவிகித வாக்குகளை பெறும். சுயேட்சைகள் உள்ளிட்ட பிற கட்சிகள் 6 சதவிகித வாக்குகளைப் பெறுவார்கள் என கூறப் பட்டுள்ளது. தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக 2008-ஆம் ஆண்டு 110 இடங்களிலும், 2018-ஆம் ஆண்டு 104 இடங்க ளிலும் மட்டுமே வென்றது. ஆனால் காங்கிரஸ், மதச்சார் பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடம் இருந்து எம்எல்ஏ-க்க ளை விலைக்கு வாங்கி, குறுக்கு வழியில் ஆட்சியில் அமர்ந்தது. தற்போது 80 இடங்களைத் தாண்ட வாய்ப் பில்லை என்பதால், அதனால் குதிரை பேரம் மூலம் 113 என்ற இடங்களை எட்டிப்பிடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.