பெங்களூரு, மே 1 - கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இதனால், எப்படியாவது, எதைச் செய்தாவது மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று துடிக்கும் பாஜக, தற்போது இலவசங்களுக்கான அறி விப்பை அள்ளி வீசியுள்ளது. ஆனால், அதிலும் தனது மதவெறி அரசியலை அரங்கேற்றியுள்ளது. இலவசங்களே கூடாது என்று ஜம்பம் அடித்துவரும் கட்சி பாஜக. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோதும், இலவச திட்டங்களை பாஜக கடுமையாக எதிர்த்தது. இலவச வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றுகின்றன. அவர்களைச் சோம்பேறியாக்குகின்றன. இதனால், நாட்டின் பொருளாதாரமே நாசமாகிறது என்றெல்லாம் ஒன்றிய அரசின் தரப்பில் வாதங்களை எடுத்து வைத்து வாதாடியது. ஆனால், அதே பாஜக, உத்தரப்பிரதேசம் - குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது, உச்சநீதிமன்றத்தில் வாதாடியதற்கு அப்படியே தலைகீழாக, ஆண்டுக்கு இரண்டு இலவச சிலிண்டர்கள், குறைந்த விலையில் எண்ணெய், பருப்பு, பேருந்தில் இலவசப் பயணம், மகளிர்க்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என சலுகைகளை அள்ளி வீசியது. இரட்டை வேடம் போட்டது. இதனையே கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக தற்போது கையில் எடுத்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்று ஒரு கருத்துக் கணிப்புகூட கூறவில்லை. பிரதமர் மோடியே நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டும் எதிர்பார்த்த முன்னேற்றம் எதுவும் பாஜகவுக்கு ஏற்படவில்லை. இதனால் கடைசி புகலிடமாக இலவசங்களின் காலில் பாஜக சரணடைந்துள்ளது. கர்நாடகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு நாள்தோறும் ‘நந்தினி’ நிறு வனத்தின் பால் அரை லிட்டர் இலவசம்; வறு மைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் இலவசம், ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும், மாதந்தோறும் 5 கிலோ அரிசி, பருப்பு இலவசமாக வழங்கப் படும்;
10 லட்சம் பேருக்கு வீட்டு மனைகள் இல வசம்; எஸ்சி - எஸ்டி பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ. 10 ஆயிரம் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தி, 5 ஆண்டுகளில் கூடுத லாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும்; வயதான வர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச உடல்பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படும்; வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் 30 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப் படும் என்று அறிவித்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டியது என்ன வென்றால், இவ்வளவு கொள்ளைக்கு இடை யிலும் தங்களின் மதவெறி அரசியலை புகுத்து வதற்கு மறக்கவில்லை என்பதுதான். ஏனென்றால், ஏழைகளுக்கு ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்களை வழங்கு வோம் என்று அறிவித்துள்ள பாஜக, அந்த 3 இலவச சிலிண்டர்களையும் உகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி ஆகிய இந்து பண்டிகைகளின்போதே வழங்குவதாக கூறியுள்ளது. அதுமட்டுமல்ல, கர்நாடகாவில் உள்ள பழமையான கோவில்களை புனர மைக்கவும் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்; மேலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்; சட்டவிரோதக் குடியேறி களைக் களைய கர்நாடக குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்; மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க காவல்துறை யில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.