பெங்களூரு, ஜன.5- நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூருவில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடாகாவில் டெல்டா மற்றும் ஒமைக் ரான் வகை கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செவ்வாயன்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமை யில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தொற்று வேகமாக பரவும் பெங்களூ ருவில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் இதர மாநிலங்களுக்கு வேறு ஒரு திட்டத்தை வகுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு ஜனவரி 6ம் தேதி முதல் ஆன் லைனில் மட்டும் வகுப்புகள் நடைபெறும். 10, 11, 12 வகுப்பு மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் 50%இருக்கைகளுடன் செயல்பட வேண்டும். மராட்டியம், கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வரு பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டா யம் என்று கூறியுள்ள கர்நாடக அரசு, இரவு நேர ஊரடங்கையும் ஜனவரி 21ம் தேதி வரை நீட்டித்துள்ளது.