பெங்களூரு, ஜன.6- சூரியனை ஆராயும் நோக்கில் விண்ணிற்கு செலுத்தப்பட்ட ஆதித்யா விண்கலம் (Aditya-L1) வெற்றிகரமாக ‘எல்1’ எனப்படும் லெக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) புதிய சாதனையை படைத்துள்ளது.
மங்கள்யான், சந்திரயான் விண்கலங்கள் மூலம் செவ்வாய், நிலவு ஆகியவற்றின் ஆராய்ச்சி யில் ஈடுபட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), சூரி யனின் புற வெளிப் பகுதிகளில் ஏற் படும் மாற்றங்களை ஆராய்வதற் கான முனைப்பில், ‘ஆதித்யா எல்-1’ எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்தது
. இதனை பிஎஸ்எல்வி சி-57 ராக் கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஆண்டு செப். 2-ஆம் தேதி வெற்றி கரமாக விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள லாக்ராஞ் சியன் பாயிண்ட் ஒன் (எல்-1) எனும் புள்ளியில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈா்ப்பு விசை சம மாக இருக்கும். இந்த புள்ளியில் ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை நிலைநிறுத்துவதன் மூலம் சூரிய னின் புற வெளிப்பகுதி மாற்றங் களை ஆராய்வது என்பதுதான் இதன் திட்டமாகும்.
அதன்படி 2023 செப்டம்பர் 2 அன்று ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், ஏறத்தாழ 4 மாதங்களுக் கும் மேலாக (127 நாள்கள்) பல கட்ட பயணத்தை மேற்கொண்டு சனிக் கிழமையன்று பிற்பகல் 4 மணியள வில் வெற்றிகரமாக சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்புவிசை சமமாக இருக்கும் ‘எல்1’ எனப்படும் லெக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது இந்திய விண்வெளித் துறையின் மற்றுமொரு மைல்கல் சாதனையாக அமைந்துள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலத்தில், சோலாா் அல்ட்ராவைலட் இமே ஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அன லைசா், எக்ஸ்ரே ஸ்பெக்ஸ்ட்ரோ மீட்டா் உள்பட 7 விதமான ஆய்வு கருவிகள் இடம் பெற்றுள்ள நிலை யில், ஆதித்யா விண்கலமானது, எல்-1 புள்ளியை வலம் வந்தவாறு சூரியனின் சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிா்வீச்சு, காந்த புலம் ஆகியவற்றை ஆய்வுசெய்ய உள்ளது.
இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகளாகும். சூரியனை ஆய்வு செய்ய இது வரை அமெரிக்கா, ஜொ்மனி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மட்டுமே விண்கலங்களை அனுப்பி யுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.