states

img

முதல்வரை அருகில் வைத்துக்கொண்டே கர்நாடக பாஜக அரசை விளாசிய மடாதிபதி!

பெங்களூரு, ஜன. 28 - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை அருகில் வைத்துக்கொண்டே, அம்மாநில அரசை, மடாதிபதி ஒருவர் சரமாரியாக விமர்சித்துள்ளார். பெங்களூருவில் உள்ள மகாதேவபுராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு, மடாதிபதி ஈஸ்வரானந்தபுர சுவாமி யின் ஷங்கராந்தி விழா கொண்டாட்ட நிகழ்வுகள் நடை பெற்றுள்ளன. இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை உள் ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மேடையில் அமர்ந்திருந்த நிலையில், மடாதிபதி ஈஸ்வரானந்தபுர சுவாமி பேசி யுள்ளார்.  அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், ‘’நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு அரசியல்வாதிகள் நிரந்தரத் தீர்வு காண்பதில்லை. மகாதேவபுரா தொகுதியில் ஆண்டு தோறும் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.

சாலைகள், பாதாள சாக்கடைகள், கால்வாய்கள் மோச மான நிலையில் இருக்கின்றன. வெள்ளம் வந்தால் மட்டுமே அரசியல்வாதிகள் இங்கு வருகின்றனர். மற்ற நேரத்தில் இங்கு வருவதில்லை. பிரச்சனையை அரசியல்வாதிகள் நிரந்தரமாக‌ தீர்க்க முயற்சிப்பதில்லை. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. தேர்தல் நேரத்தில் வெற்று வாக்குறுதிகளை மட்டும் அளிக்கின்றனர்’’ என அதிரடியாக அரசை விமர்சித் துள்ளார். இது அருகில் உட்கார்ந்திருந்த பாஜக முதல்வர் பசவ ராஜ் பொம்மைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுக்க மான முகத்துடன், என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் திகைத்துப் போன பசவராஜ் பொம்மை, ஒரு கட்டத்தில் இனியும் பொறுக்க முடியாது என்ற ரீதியில், மடாதிபதியின் கையில் இருந்து மைக்கைப் பிடுங்கி யுள்ளார்.  பின்னர், “நான் வெற்று வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதி அல்ல. நான் பிரச்சனைகளை நிரந்த ரமாக தீர்க்கும் அரசியல்வாதி. இங்குள்ள பிரச்சனையை தீர்க்கவும் நிதி ஒதுக்கியுள்ளேன்” என்று கூறி, தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.  கர்நாடகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில பாஜக அரசை மடாதிபதி ஒருவர் விமர்சித்ததும், அவரிடமிருந்து முதல்வர் பசவராஜ் பொம்மை மைக்கைப் பிடுங்கியதும் அம்மாநி லத்தில் பரபரப்பாக மாறியுள்ளது.

;