பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகில் அமைந்துள்ளது எஸ்எப் எஸ் அகடாமி. இன்று இப்பள்ளி ஓர் உலக சாதனை நிகழ்த்தி உள்ளது. விடுதலைப் பவள விழாவை முன்னிட்டு, குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாய் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. ஓரிகாமி முறையில் மாணவர்கள் 2.3 லட்சம் காகித கப்பல்கள் செய்து,அவற்றால் 600 சதுர மீட்டரில் கண்ணைக் கவரும் வகையில் தேசியக் கொடியை பள்ளி கூடைப் பந்து மைதானத்தில் உருவாக்கினர். ஒற்றுமையின் சக்தியையும் தேசபக்தியையும் ஒருங்கே பறைசாற்றுவதாக இந்நிகழ்வு அமைந்தது. இதில் சு.பொ.அகத்தியலிங்கத்தின் பேரன் ச.ச.முகிலனும் பங்கேற்றான்.