states

img

தொடரும் விவசாயிகள் போராட்டம்: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் ரத்து


தொடரும் விவசாயிகள் போராட்டம்: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் ரத்து
தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்து அமைச்சர் பிரல்ஹத் ஜோஷி தெரிவித்துள்ளார். 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாத இறுதியில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப்பெற வேண்டும் என்ற வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள் இன்று 20 வது நாளாக தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு காரணமான வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கடிதம் மூலம் பதிலளித்துள்ளார். அந்த கடிதத்தில் இந்த முறை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாகவும் நேரடியாக ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டலாம் என அனைத்து கட்சிகளும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அளித்த பேட்டியில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மக்களவை தயாராக உள்ளதாகவும், இதுபற்றி நாடாளுமன்ற விவகார மத்திய அமைச்சரவைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.