states

img

ஆனந்த் சுப்பிரமணியனே இமயமலை சாமியார் - சிபிஐ

தேசிய பங்கு சந்தையின் ரகசிய விவரங்களை பல நிறுவனங்களுக்கு பகிர்ந்த கோ-லேகேஷன் ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியம் தான் இமயமலை யோகி என்று சிபிஐ நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. 
தேசியப் பங்குச்சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2013 முதல் 2016ம் ஆண்டுவரை சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார். அவரின் பதவிக்காலத்தில் அவரின் ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார்.  
அப்போது இமயமலை சாமியார் ஒருவரின் ஆலோசனையின்படிதான் அவரை நியமித்ததாகவும் அ வருக்கான ஊதியத்தை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. 
இந்நிலையில் ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு கோடிக்கணக்கில் ஊதிய உயர்வு கிடைத்தது குறித்த புகார்கள்  பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபியிடம் சென்றது. இதுகுறித்து செபி நடத்திய  விசாரணையில் சித்ரா கடந்த 20 ஆண்டுகளாக இமயமலை சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படிதான் என்எஸ்இ அமைப்பை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல், ரிக்யஜுர்சாமா என்ற பெயரில் மின்அஞ்சல் உருவாக்கி, அதில் என்எஸ்இ ரகசியத்தகவல்கள் அனைத்தும் சாமியாரிடம் சித்ரா பகிர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, என்எஸ்இக்கு இழப்புஏற்படுத்தியதாகக் கூறி சித்ராவுக்கு ரூ3 கோடி அபராதமும், ஆனந்த்துக்கு ரூ.2 கோடி அபராதமும் செபி விதித்தது. 

இதற்கிடையே சித்ரா பணிக்காலத்தில், என்என்சி சர்வர்கள் வைக்கும் இடத்தில், பங்குவர்த்தகம், பங்குவிலை ஆகிய தகவல்களை விரைவாகப் பெறுவதற்காக சில குறிப்பிட்ட பங்கு தரகர்களின் சர்வர்கள் வைக்கப்பட்டன. இது தொடர்பாக எழுந்தபுகாரில் சிபிஐ கடந்த 2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தவழக்கில் ஆனந்த் சுப்பிரமணியத்தை கடந்த மாதம்24ம் தேதி சிபிஐ கைது செய்தது, கடந்த வாரம் சித்ரா ராமகிருஷ்ணாவையும் சிபிஐ கைது செய்தது. இருவரையும் காவலில் எடுத்து  சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது
இந்த விசாரணை குறித்து சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.  அதில் இமயமலை சாமியாரும், மின் அஞ்சலை உருவாக்கியதும் ஆனந்த் சுப்பிரமணியம்தான். சித்ராவிடம் தகவல்களை பெறுவதற்காக ரிக்யஜூர் சாம  என்ற மின்னஞ்சல் உருவாக்கப்பட்டுள்ளது.  இதை இயக்கியவர் குறித்து விசாரித்து வருகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.