states

புதுவை உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகிறது

புதுச்சேரி, மார்ச் 5- உச்சநீதிமன்ற தலையீடு காரணமாக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் தற்போது அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையில் 2011ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை புதுவையில் நடத்த கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த அக்டோபர் 4ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தியது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு கடந்த செப்டம்பரில் தேர்தல் தேதியை அறிவித்தது. பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடில் குளறுபடி இருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. குளறுபடிகளை சரி செய்து தேர்தல் அறிவிப்பை வெளியிடும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடை அரசு ரத்து செய்தது. இதன்பின் மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பிற்படுத்தப் பட்டோர், பழங்குடியினருக்கு ஒதுக்கீடு வழங்கி  தேர்தலை நடத்தக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது.

புதுவை அரசு சார்பில் இடஒதுக்கீடு வழங்கு வது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சசிதரன்  தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் திமுக மாநில அமைப்பா ளர் சிவா, பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியி னருக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த  மனு உடனடியாக விசாரணைக்கு ஏற்கப்பட வில்லை. உயர்நீதிமன்றத்தில் இருந்த வழக்கு களை மனுதாரர்கள் திரும்பப் பெற்றனர். இதனால் உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை ரத்தானது. புதுவை மாநில  தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற் கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டது. நகராட்சி, கொம்யூன் வாரியாக தேர்தல் நடத்தும்  அதிகாரிகளை நியமித்தது. இதனிடையே இந்திய தேர்தல் ஆணையம் புதுவை வாக்காளர்  பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்து அறிவிப்பு வெளியிட்டது. அதனடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி யில் மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இந்நிலையில் திமுக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப் பட்டது. அரசு தரப்பு, தேர்தல் ஆணையம், மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. வாதங் களை பதிவு செய்த நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி புதுவை அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து ள்ளனர். உச்சநீதிமன்ற தலையீடு காரணமாக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் தற்போது அறிவிக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகிற மே மாதம் நடக்க உள்ளது. வழக்கமாக தேர்தல்கள் மே மாதம்தான் நடை பெறும். இப்போது பொதுத்தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளதால் தேர்தல் மே மாதம் நடக்க வாய்ப்பில்லை. பள்ளிகளில் வாக்குச் சாவடிகளை அமைப்பது, தேர்தல் பணியில்  ஆசிரியர்களை ஈடுபடுத்துவது ஆகியவற்றி லும் சிக்கல் ஏற்படும். எனவே உள்ளாட்சி தேர்தல்  மேலும் சில மாதத்திற்கு தள்ளிப்போகிறது.