புதுச்சேரி, மார்ச் 11- புதுவை அண்ணா சாலையில் ஜவுளிக்கடை உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு வழக்கம் போல் வீட்டுக்கு சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை காலை ஊழியர்கள் வந்து கடையை திறந்தனர். அப்போது பணம் வைக்கும் கல்லா பெட்டி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கடை உரிமை யாளருக்கு தகவல் அளித்தனர். கடை உரிமையாளர் வந்து பார்த்த போது, பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது இரவு 2 மணிக்கு மேல் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது. எனவே 2 மணிக்கு மேல் கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது. மேலும் அங்கு சேகரிக்கப்பட்ட தடயங்களை வைத்து தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.