states

img

அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை வழங்க கோரிக்கை

புதுச்சேரி, பிப். 25- அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி அரசு உழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவுத்துறை, நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி நிறுவன ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், தன்னாட்சி நிறுவன ஊழியர்களுக்கு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சம்மேளனத்தின் கவுரவத் தலைவர் சி.எச்.பாலமோகனன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் கீதா, பிரேமதாசன், கிறிஸ்தோபர், முனுசாமி, சிவஞானம், ஆனந்த கணபதி, சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;