states

img

புதுச்சேரி உழவர்கரை நகரக்குழு சார்பில் ஆண்களுக்கான சமையல்போட்டி

சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி உழவர்கரை நகரக்குழு சார்பில் ஆண்களுக்கான சமையல்போட்டி நடத்தப்பட்டது. கட்சியின் செயலாளர் ராம்ஜி தலைமை தாங்கினார். பிரதேச செயற்குழு உறுப்பினர் என்.கொளஞ்சியப்பன் போட்டியை துவக்கி வைத்தார்.  நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் 5 பேர் வகைவகையாக சமையல் செய்தனர். சமையைல் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தரராமன், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் சிபிஎம் நகராட்சி கவுன்சிலர் ஃபர்கத் சுல்தானா ஆகியோர் நினைவு பரிசாக புத்தகம் வழங்கினர்.