கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.வெங்கட்ராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தேசத்தை பாதுகாப்பதில் மகத்தான தியாகம் செய்த வீரர்களுக்கு அப்போது வீர வணக்கம் செலுத்தப்பட்டது. விழாவில் இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் மூத்த கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளும் கலந்து கொண்டனர்.