states

img

22 நிமிடங்களில் முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்!

புதுச்சேரி, பிப். 23- புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் கூடிய 22 நிமிடங்களிலேயே காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. புதுச்சேரி 15ஆவது சட்டப்பேரவை யின் 2ஆவது கூட்டத் தொடர் புதனன்று (பிப்.23) காலை 9.30 மணிக்கு கூடியது. மறைந்த முன்னாள் சட்டப்பேரவை பரசுராமன், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்ட முன் வரைவு களுக்கு இசைவு அளித்ததை பேரவைத் தலைவர் செல்வம் அறி வித்தார். அப்போது குறுக்கிட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு அறிவித்த எந்த ஒரு திட்டங்களையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை” என்று குற்றம் சாட்டினார். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முறையாக செய்யப்படவில்லை. பொங்கல், தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட பொருட்கள் இதுவரை குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கவில்லை. பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு 10,000 அரசு அறிவித்தது போல் இதுவரை வழங்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பளமே வழங்காமல் உள்ளது என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.மேலும்  ‘பெஸ்ட் புதுவை’ என பிரதமர் கூறியுள்ளார். என்ன என்ன திட்டங்கள் கொண்டு வரப்போகுகிறது என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். எதிர்கட்சி தலைவரின் கேள்வி களுக்கு அரசு தரப்பில் பதில் ஏதும் கூறவில்லை. இதனால், கோரிக்கை பதாகையை ஏந்தியவாறு திமுக உறுப்பினர்கள் அனைவரும் அரசுக்கு எதிராக கோஷம்போட்டனர். மேலும், பேரவைக் கூட்டத்தை புறக்கணித்தும் வெளிநடப்பு செய்த னர். காங்கிரஸ் உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் ஆகியோரும் பேரவைத்தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி திமுகவுக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து பேரவைத்தலைவர் செல்வம் சட்டப்பேரவை கூட்டத் தொடரை  காலவரையின்றி ஒத்தி வைத்தார்.  காலை 9.30 மணிக்கு கூடிய கூட்டத்தொடர் 22 நிமிடங்களிலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.