states

img

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணை

புதுச்சேரி, மார்ச் 2- மாற்றுத்திறனாளி களுக்கு ஓய்வூதிய ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி அரசு சமூக நலத்துறை மூலம் செயல் படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கும் விழா புதன்கிழமை (மார்ச் 2) சட்டப்பேரவையில் முதல் வர் அலுவலகத்தில்  நடை பெற்றது. இதில், முதல்வர் ரங்க சாமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிக ளுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார், துறை இயக்குநர் கலா வதி உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிதாக விண்ணப்பித்தி ருந்த 490 மாற்றுத்திறனாளிக ளுக்கு ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டது.