புதுச்சேரி, மார்ச் 2- புதுச்சேரியை ஆக்கிரமித்துள்ள பேனர்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் சமீபகாலமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சி பேனர்களும், தனி நபர்களின் பேனர்களும் வைக்கப்படுகின்றன. புதுச்சேரியில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் பேனர் தடுப்பு சட்டம் அமலில் இருந்து வருகிறது. இத னால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சாலை விபத்துகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு சமூக அமைப்புகள் புகார் அனுப்பி இருந்தனர்.
தடை
பேனர் மற்றும் கட் அவுட் வைப்பதற்கு எதிரான கூட்டம் செவ்வாயன்று (மார்ச் 1) பேட்டை யன் சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வல்லவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காவல்துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகிய துறைகளின் அதிகாரி கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதுச்சேரியில் பேனர் தடுப்பு சட்டம் 2000த்தின் படி அனுமதியின்றி பொது இடங்க ளில் பேனர்கள் கட் அவுட்கள் வைப்ப தற்கு தடை உள்ளது. எனவே தடையை மீறி பேனர் வைத்துள்ள வர்கள் உடனடியாக அகற்ற வேண்டும். வெள்ளிக்கிழமை முதல் காவல்துறை மூலம் பேனர்களை அகற்றுவதோடு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.