புதுச்சேரி, மார்ச் 11- இறந்தவர்களின் பெயர்களை குடும்ப அட்டைகளிலிருந்து நீக்க வேண்டும் என்று குடிமை பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் வழங்கப்பட்ட குடும்ப அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்கள் எவரேனும் இறக்க நேரிட்டால், அதன் விபரங்களை துறை அலுவலகத்தில் சமர்பித்து இறந்த உறுப்பினர் பெயரை நீக்கம் செய்வது குடும்பத் தலைவரின் கடமையாகும். மேலும் அவ்வாறு நீக்காமல் இருப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இதுவரை நீக்கம் செய்யாமல் உள்ள இறந்த குடும்ப உறுப்பினர்களின் இறப்பு சான்றிதழை துறையில் சமர்பித்து பதிவிலிருந்து வரும் மார்ச் 31க்குள் நீக்கும்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பெயரை நீக்கல் செய்ய னஉளஉய.யீல.படிஎ.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்களாம் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.