states

பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்வு புதுச்சேரி பாஜக- என்ஆர்காங். அரசின் பொங்கல் பரிசு

புதுச்சேரி, ஜன.10- புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில்  பாண்லே கூட்டுறவு நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து பால் மற்றும் பால் பொருட்களை தயாரித்து  விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பால் லிட்டர் ரூ. 42 முதல் ரூ.48 வரை, தரம் பிரித்து  பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி கூட்டுறவு பதிவாளர் எஸ்.யஸ்வந்தையா, பாண்லே நிறுவனத்தின் மேலான் இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பாண்லே நிறுவனத்தின் சார்பில்  கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதுச்சேரி பாண்லே நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் லீட்டர் ஒன்றுக்கு ரூ. 4 விதம் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு புதன்கிழமை (ஜன.11) முதல் அமலுக்கு வருகிறது என கூறப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் போராட் டத்தை தொடர்ந்து, பால் கொல்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 மட்டுமே அரசு தரப்பில் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், நுகர் போருக்கு மட்டும் 4 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.