states

img

புதுவையில் கொரோனா தொற்று பூஜ்யமானது

புதுச்சேரி, மார்ச் 11- புதுவையில் 433 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதனால் தொற்று எண்ணிக்கை பூஜ்யமானது. மாநிலத்தில் யாரும் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. புதுவையில் 4, காரைக்காலில் 2 பேர் என 6 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 774 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். புதுவையில் 7, காரைக்காலில் 10, மாகியில் 4 பேர் என 21 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 21 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,962ஆக உள்ளது. புதுவையில் 2ஆவது தவணை உட்பட 16 லட்சத்து 2 ஆயிரத்து 392 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.