states

img

அரசு பள்ளியில் கற்றல் திருவிழா

புதுச்சேரி, ஏப். 20- புதுச்சேரி கீழுர் அரசு நடுநிலைப் பள்ளியில் கற்றல் திருவிழா தலைமை ஆசிரியர் உமாதேவி தலைமையில் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் தணிகாசலம் வரவேற்றார். அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் பொறுப்பாளர் கார்த்திகேயன் கற்றல் திருவிழா நிகழ்வின் நோக்கவுரையாற்றினார். கீழுர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மருத்துவர் தேவிகா வாழ்த்திப் பேசினார். பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைக்கல்வி அலுவலர் மீனாட்சிசுந்தரம் கற்றல் திருவிழாவை தொடங்கி வைத்தார். மாணவர்களின் கற்றல் திறனை வெளிப்படுத்தும் விதமாக நாடகங்கள், பாடல்கள் உரைவீச்சு, தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரபலங்களின் மாறுவேடங்கள், பண்பாட்டு நடனங்கள் ஆகியவற்றை நிகழ்த்திக் காட்டினர். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியம், பாடல், கதைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது. இதில் ஆசிரியர்கள் சந்திரசேகரன், சங்கர், பாலாஜி, மோகனா, இந்துமதி, ரேவதி, ஜானகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடக்கப் பள்ளி ஆசிரியை மங்களாம்பிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.