புதுச்சேரி,மார்ச்.21- கால்நடை விவசாயிகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்கும் விழா புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலம் 75 விழுக்காடு மானியத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்சங்கத்தில் உறுப்பினர் அல்லாத கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்குகால்நடை தீவனம் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா சண்முகபுரத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கால்நடை நலத்துறை அமைச்சர் தேனீ. சி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி கால்நடை வளர்க்கும் பயனாளிகளுக்கு கால்நடை மற்றும் கன்றுத் தீவனத்தை வழங்கி நலத்திட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அரச கொறடா ஆறுமுகம்,சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், துறை இயக்குநர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் திரளான பயனாளிகள் கலந்து கொண்டனர்.