புதுச்சேரி,டிச.30- போதையில்லா புதுச்சேரி, அனை வருக்கும் அறிவியல் பூர்வமான கல்வி என்ற முழக்கத்தை வலியுறுத்தி பாலர் பட்டாம் பூச்சிகள் இயக்கத்தின் சார்பில் வெள்ளியன்று (டிச. 30) உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர்சிலை எதரிலிருந்து துவங்கிய ஊர்வலத்தில் மகாத்மாகாந்தி, பாரதியார், ஜான்சிராணி ஆகிய தேசிய தலைவர் களின் உருவபடத்துடன் ‘போதையில்லா புதுச்சேரி’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை சிறு வர்கள் கையில் ஏந்தியவாறு சென்ற னர். பின்னர் மாதகோவில் வீதியில் போதையில்லா புதுச்சேரியை உரு வாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஒருங்கிணைப்பாளர் எஸ்.தரணி, நிர்வாகிகள் ஹேமலதா, வர்ஷா, பவியஸ்ரீ, ெஜன்னி, நன்மாறன், பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.